fbpx

முதலாம்‌ ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்…? உயர் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!

கல்லூரி முதலாம்‌ ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம்‌ தேதி வகுப்புகள்‌ துவங்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள 163 அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ 1லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள்‌ உள்ளது. இதற்கான மாணவர்கள்‌ சேர்க்கை நடைபெற்று வருகிறது. 75, 811 மாணவர்கள்‌ முதலாம்‌ ஆண்டில்‌ சேர்க்கப்பட்டுள்ளனர்‌.

தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இனசுழற்சி முறையில்‌ மாணவர்‌ சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன்‌ அடிப்படையில்‌ ஜூன்‌ 30 ஆம்‌ தேதி வரையில்‌ முதலாம்‌ ஆண்டு மாணவர்‌ சேர்க்கை நடைபெறும்‌. அதனைத்‌ தொடர்ந்து முதலாம்‌ ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம்‌ தேதி வகுப்புகள்‌ துவங்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆப்பிள் போன் பயனர்களா நீங்கள்?... இனி உங்க மொபைலை நீங்களே சரி பண்ணலாம்!... புதிய திட்டம் அறிமுகம்!

Thu Jun 22 , 2023
ஆப்பிள் தனது சுய பழுதுபார்க்கும் திட்டத்தை ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்களுக்கு விரிவுபடுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனம், தங்களது ஐபோன்கள் மற்றும் மேக் போன்றவற்றை பயனர்களே சரி செய்து கொள்ளும் திட்டத்தை ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்களுக்கு விரிவுபடுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயனர்கள் பழுதுபார்ப்பதற்குத் தேவையான அனைத்து உதிரி பாகங்களையும், அதனை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விளக்க […]
ஐபோனை இவ்வளவு குறைந்த விலைக்கு வாங்க முடியுமா..? ரூ.12 ஆயிரம் வரை சலுகை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

You May Like