fbpx

மாணவர்களே…. பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு குறித்து உயர் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்க இருந்த பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு, நீட் தேர்வினால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு மீண்டும் தொடங்கியுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. கட் – ஆப் 184 முதல் 200 வரை உள்ள 14,524 பேர் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். அதோடு 332 அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.

கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், வரும் 22ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். 22-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேராவிட்டால் அந்த இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும். மேலும் இது குறித்து http://www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது‌.

Vignesh

Next Post

தமிழகமே... தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே...! மிஸ் பண்ணிடாதீங்க

Sun Sep 11 , 2022
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இன்று தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி என்ற நோக்கில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா […]

You May Like