தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு நடத்திய நிர்மலா சீத்தாராமன் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கானாவின் காமாரெட்டி பகுதியில் ரேஷன் கடையில் மத்திய நிதி அமைச்சர் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். ’இங்கு மோடியின் படம் இல்லையே? நியாயவிலைக் கடையில் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை? என ஆட்சியரிடம் கேட்டார். இது தனக்கு ஏமாற்றத்தைஅளித்திருப்பதாகக் கூறினார். மாநில அரசு அளிக்கும் அரிசி மானியத்தை விட மத்திய அரசு அதிகமாக மானியம் அளிக்கும் நிலையில் பிரதமரின் படத்தை ஏன் நியாயவிலைக் கடைகளில் வைக்கக்கூடாது ? எனவும் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக தெலுங்கானா வந்த நிர்மலா சீதாராமனின் காரை இளைஞர் காங்கிரஸ் கட்சி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரத்தில் மந்தநிலை , விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்நது கே.டி.ராமாராவ் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அரசுக்கு மாநிலம் வழங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வெறும் 46 பைசாதான் திரும்பக் கிடைக்கின்றது. என நிர்மலா சீதாராமன் பேசியதை சுட்டிக் காட்டி பதிலளித்தார்.
சிலிண்டரில் மோடியின் படம்
ரேஷன் கடையில் மோடியின் படம் வைக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் , சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் மோடியின் படத்தை சிலிண்டரில் ஒட்டி டி.ஆர்.எஸ்.கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். நிர்மலா சீதாராமனை விமர்சிக்கும் வகையில் டி.ஆர்.எஸ். கட்சியினர் கண்டனம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.