fbpx

ஜிஎஸ்டி கூட்டங்களில் அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்காமல் வாயில்லா பூச்சியாக இருந்தது ஏன்? – எடப்பாடி பழனிசாமி

உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜிஎஸ்டி-யின் 47-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக அரசின் நிதி அமைச்சரும் கலந்துகொண்டார். அதிமுக ஆட்சியின்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரசு சார்பாக ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது, தமிழ்நாட்டின் சார்பாக பல அத்தியாவசியப் பொருட்களுக்கு வாதாடி வரி விலக்கு பெறப்பட்டது. ஒரு சில வரிகளுக்கு வரிக்குறைப்பும் பெறப்பட்டது.

ஜிஎஸ்டி கூட்டங்களில் அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்காமல் வாயில்லா பூச்சியாக இருந்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி

ஆனால், இந்த திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்ற அரசின் நிதி அமைச்சர் மக்களை பாதிக்கக் கூடிய வரி உயர்வுகளுக்கு ஆட்சேபனையோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் வாயில்லா பூச்சியாக இருந்தது ஏன்? ஆனால், திராவிட மாடல் என்று பீற்றிக்கொள்வதில் எந்தக் குறையும் இல்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்தி, தாங்கள்தான் வலிமையானவர்கள் என்று கூறிக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம் இதன் மூலம் வெளிப்படுகிறது.

ஜிஎஸ்டி கூட்டங்களில் அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்காமல் வாயில்லா பூச்சியாக இருந்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி

இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்புக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனம் காத்தது கண்டிக்கத்தக்கது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மீதான அக்கறையின்மையை நன்கு வெளிப்படுத்துகிறது. ஏழை, எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் உணவுப் பொருள்கள் மீதான இந்த வரியை திரும்பப்பெற வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலையும், மத்திய அரசையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்த வரிவிதிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு, திமுக அரசின் சார்பில் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மது போதையின் உச்சத்தில் இருந்த தந்தை... மகனின் தலையில் குழவிக்கல்லை போட்ட கொடூரம்..!

Wed Jul 20 , 2022
கடலூர் புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையத்தில் உள்ள இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (38). இவருடைய மனைவி சுமதி (32). இந்த தம்பதிக்கு லதா (11), நந்தினி (7) என இருமகள்கள் உள்ளனர். அர்ஜூனன் (14) என்ற மகன் இருந்தான். மகன் அர்ஜூனன், அங்குசெட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். முருகன் சிறுவத்தூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்து வேலை […]

You May Like