fbpx

#புதுக்கோட்டை :இறந்த நிலையில் கணவரை கண்ட மனைவி அதிர்ச்சியில் உயிரை விட்ட பரிதாபம்..! 

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள துவரவயல் கிராமத்தில் திருநாவுக்கரசு (31) என்பவர் தனது மனைவி வினிதா என்பவருடன் வசித்து வருகிறார். கணவர் நேற்றைய தினத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசரின் உடலை பார்த்த அவரது மனைவி பெரும் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை மீட்டு உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். 

இதனால் அவரது உறவினர்கள் பெரும் அதிர்ச்சி உள்ளாகியுள்ளனர். நேற்று நிகழ்ந்த குடும்ப தகராறின் காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மனைவியும் இறந்த கணவனை கண்ட அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

அதிமுக முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் மரணம்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் அஞ்சலி..!!

Mon Dec 12 , 2022
அதிமுக நாடாளுமன்ற முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன், மாரடைப்பால் காலமானார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வடபட்டியை சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன் (வயது 67). இவரது தந்தை தர்மர். தாயார் சின்னதாயம்மாள். டி.ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பணியாற்றி உள்ளார். சிவகாசி யூனியன் தலைவராக 1986ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரையும், 1996 முதல் 2001 வரையும், 2011 முதல் 2014 வரை என 3 முறை இருந்துள்ளார். […]
அதிமுக முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் மரணம்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் அஞ்சலி..!!

You May Like