காஞ்சிபுரம் பகுதியில் பூபாலன் என்கிற துணிக்கடை உரிமையாளர் தனது மனைவி மற்றும் மகனுடன் ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள குடிசை நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மனைவி சூர்யாவினை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளான நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சூர்யா மிகவும் மன வேதனையுடன் இருந்துள்ளார். இதனிடையே சென்ற 19ஆம் தேதி அன்று மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி கணவர், மாமனாரிடம் செல்போனில் தகவல் கூறியுள்ளார். மகளின் மரணத்தில் ஏதோ இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்ததினை தொடர்ந்து சூர்யாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.