திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள சந்தப்பேட்டையில் நவீன் குமார் (32) என்ற இளைஞர் சென்ற அக்டோபர் மாதம் 20ஆம் தேதி வேடச்சந்தூர் அடுத்த கோடாங்கிப்பட்டியின் அருகில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், நவீன்குமாரின் மனைவியான விஜயசாந்தி (25), என்பவர் தனது ஆண் நண்பர் சிவா(26) என்பவரோடு சேர்ந்து நவீன்குமாரை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து , காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் கைதான சிவா , விஜயசாந்தி ஆகியோரின் குற்றத்தினை ஒடுக்கும் பொருட்டு இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் சிவா மற்றும் விஜயசாந்தி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை பகுதியில் உள்ள மத்திய சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.