fbpx

தனி குடித்தனம் போலாமா.? ஆசை காட்டி கணவன் படுகொலை.! இளம் பெண் கைது.!

ஆந்திர மாநிலத்தில் தனி குடித்தனம் அழைத்துச் செல்லப்பட்ட கணவனை காதலனுடன் சேர்ந்து இளம்பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது காதலனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சிகுறுவாடா பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(35) இவரது தம்பியான கோவிந்த் என்பவருக்கு மானசா என்ற பெண்ணுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தனி குடித்தனம் வேண்டும் என்று கணவனை வற்புறுத்தி இருக்கிறார் மானசா. இதனால் கடந்த 15ஆம் தேதி கணவன் மற்றும் மனைவி இருவரும் தனி குடித்தனம் வந்துள்ளனர்.

இந்நிலையில் 16ஆம் தேதி தனது கணவரின் சகோதரருக்கு போன் செய்த மானசா கடன் தொல்லையால் கோவிந்த் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாஸ்கர் மற்றும் குடும்பத்தினர் கோவிந்த் வீட்டிற்கு சென்று அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊர் எடுத்துச் சென்றனர். அப்போது கோவிந்தன் கழுத்தில் காயமிருப்பதை கண்டு சந்தேகமடைந்த பாஸ்கர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இதனை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோவிந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மானசா தனது காதலன் சிம்மாதிரியுடன் சேர்ந்து கோவிந்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் மானசா சிம்மாதிரியை நீண்ட நாட்கள் காதலித்து வந்ததாகவும் அவரது விருப்பத்தை மீறி கோவிந்துடன் கட்டாய திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்த அவரை கைது செய்த காவல்துறை தலைமறைவாக உள்ள அவரது காதலனை தேடி வருகிறது.

Next Post

நம்ப வைத்து அடுத்தடுத்து 20 பேரை கொன்ற மந்திரவாதி..!! அதிர்ந்துபோன போலீஸ்..!! விசாரணையில் ஷாக்..!!

Tue Dec 19 , 2023
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஏற்கனவே 20 கொலைகளை செய்த கொலைகாரன் என்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வேலைவாய்ப்பு, திருமண தடை, சொத்து கைவசப்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மந்திரத்தால் பூஜை செய்து நடக்க வைப்பதாக கூறி நம்பவைத்து அவர்களை கொலை செய்வது தெரியவந்தது. வனபர்த்தி மாவட்டம் நாகப்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை […]

You May Like