fbpx

#தர்மபுரி: இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட தகராறில் 9 மாத குழந்தையை தவிக்க விட்டு தூக்கில் தொங்கிய பெண்..!

தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள போடூர் காட்டுகொல்லையில் மாதையனின் மகள் ஜோதி(25) என்பவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்னரே தாய்மாமாவான அன்பு என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இதனை தொடர்ந்து திருமணமான 1 1/2 ஆண்டுகளிலேயே ஜோதி குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். இதற்கு பின்னர் சென்ற 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஜோதியை சாமிநாதன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 

ஜோதி மற்றும் சுவாமிநாதன் தம்பதிகளுக்கு 9 மாதத்தில் அமிழ்தரசன் என்ற ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த நிலையில் ஜோதியின் முதல் கணவரான அன்புவின் தந்தை மாணிக்கம்  11-ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இறுதி சடங்கிற்கு செல்ல தன்னை அழைத்து செல்லுமாறு ஜோதி தனது 2-வது கணவரிடம் கேட்டுள்ளார். அங்கு சென்றால் ஏதாவது பிரச்சனை ஏற்பட நேரிடும் என்று அங்கு செல்லக்கூடாது என்று சொல்லியதால் கணவன் மனைவிக்கு இடையே சற்று தகராறு ஏற்பட்டுள்ளது. 

தகராறில் மனம் உடைந்து போன ஜோதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக செய்ய அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

பாலியல் சீன்டலில் ஈடுபட்டால் மின்சாரம் பாயும்!!! 10ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு...

Thu Dec 15 , 2022
பாலியல் தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ள பள்ளி மாணவி உருவாக்கிய பிரத்யேக காலணி… பாலியல் சீண்டலில் இருந்து பெண்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு புதிய காலணி ஒன்றை கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள எஸ்ஆர்என் மேத்தா பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி கண்டுபிடித்துள்ளார். இவர் உருவாக்கிய அந்த காலனியில் மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு பெண் தனியாக இருக்கும்போது பாலியல் தொல்லையில் ஈடுபடுவோரை இந்த […]

You May Like