fbpx

மக்களவை தேர்தல் 2024 | மதுரையில் சு. வெங்கடேசன் முன்னிலையில் நீடித்து வருகிறார்..!!

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மீதமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள் களம் கண்டனர். முதல்கட்டத்தேர்தலில் 66.1 சதவிகிதம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தலில் முறையே 66 புள்ளி 7 மற்றும் 61 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதேபோல் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்டத் தேர்தலில் 67.3, 60.5, 63.4 சதவிகித வாக்குகள் பதிவாகின.

கடைசி கட்டத் தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. தேசத்தில் மொத்தம் நாட்டில் வாக்களிக்க தகுதியுடைய சுமார் 97 கோடி பேரில், 64 கோடியே 20 லட்சம் பேர் ஜனநாயக கடமையாற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

2024 மக்களவை தேர்தலில் மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிட்டிங் எம்.பி. சு. வெங்கடேசன், அதிமுக தரப்பில் பி. சரவணன், பா.ஜ.க. தரப்பில் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் மோ. சத்யா தேவி உள்ளிட்ட பலர் களத்தில் உள்ளனர். பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை இந்தத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் இவர் ஆவார்.

மதுரையில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சு. வெங்கடேசன் முன்னிலை வகிக்கிறார். தற்போது உள்ள நிலவரப்படி, சு. வெங்கடேசன் 1187 வாக்குகளை பெற்று முன்னிலையில் நீடிக்கிறார்.

English Summary

English summary

Next Post

Lok Sabha Election 2024: தமிழகத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை..!!

Tue Jun 4 , 2024
english summary

You May Like