fbpx

வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மறந்தும் கூட இந்த விஷயங்களை வீட்டில் செய்யாதீர்கள்.!?

பொதுவாக வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகள் கடவுளுக்கு உகந்த நாளாக கூறப்பட்டு வருகிறது. பல கோயில்களிலும் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகள் சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்பட்டு கடவுளுக்கு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்து வருகின்றனர். அப்படியிருக்க இந்த கிழமைகளில் வீட்டின் பெண்கள் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

1. வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமையில் வீட்டில் விளக்கு ஏற்றும் போது நல்ல நேரம் முடிவதற்குள் அனைத்து விட வேண்டும். தீபத்தை தானாகவோ அல்லது ஊதியோ அணைக்காமல் புஷ்பத்தை வைத்து அணைக்க வேண்டும்.
2. இரவு நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யும்போது குப்பைகளை வெளியில் கொட்ட கூடாது. அப்படி கொட்டினால் வீட்டில் உள்ள செல்வங்கள் வெளியே சென்று விடும் என்று கூறப்பட்டு வருகிறது.
3. வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் அல்லது தலை ஈரமாகவோ பூஜை செய்வது துர்அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
4. விளக்கு வைக்கும் நேரத்தில் வாசல் படி, அம்மி, ஆட்டுக்கல் போன்றவற்றில் பெண்கள் உட்காரக் கூடாது.
5. விளக்கு ஏற்றிய பின்பு பால், தயிர், உப்பு, கடுகு, ஊசி போன்றவற்றை யாருக்கும் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
6. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நகம், முடியை கண்டிப்பாக வெட்டக்கூடாது.
7. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு முந்தைய நாட்களிலேயே வீட்டை கழுவி விடவோ அல்லது துடைக்கவோ செய்ய வேண்டும். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் செய்வதால் வீட்டில் உள்ள லட்சுமி வீட்டை விட்டு சென்று விடுவாள் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
8. வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வந்தால் மகாலட்சுமி, முருகன், சுக்கிரன் மூன்று கடவுளின் அருளையும் ஒரே நேரத்தில் பெறலாம்.
9. செவ்வாய், வெள்ளி கிழமைகள் மகாலட்சுமி, குபேரனுக்கு உரிய நாள் என்பதால் பெண்கள் நெற்றி நிறைய குங்குமத்தை அணிந்து கொள்ள வேண்டும். இது செல்வத்தையும், ஆயுளையும் பெருக்கும்.

Baskar

Next Post

BIG NEWS: MLA பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்…! ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை புறக்கணித்த காங்கிரஸ்...!

Sat Jan 20 , 2024
ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை காங்கிரஸ் புறக்கணித்ததால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர். அயோத்தியில் நடைபெறவுள்ள ஸ்ரீராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார். ஸ்ரீராமர் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோயில் […]

You May Like