fbpx

சென்னை அருகே கடன் நெருக்கடியால்…..! தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…..!

தண்டையார்பேட்டை விநாயகபுரம் முதலாவது தெருவை சேர்ந்தவர் ரகுராமன்(38). இவர் மணலில் இருக்கின்ற ஒரு உலோக பட்டரையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும் 9ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் சென்ற 2022 ஆம் வருடம் ரகுராமன் அந்த பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் வங்கியில் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த கடனை ரக ராமன் வட்டியுடன் செலுத்தி வந்தார். கடைசி 3 மாதங்கள் அவர் கடனுக்கான மாதாந்திர தவணையை செலுத்து இயலவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்த வங்கியின் ஊழியர்கள் கடனை திருப்பி கேட்டு ரகுராமனுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் விரத்தியுடன் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைக் கண்டு அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் தகவல் அறிந்து காசிமேடு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரகுராமன் உடலை மீட்டு பிரயோக பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனியார் வங்கி ஊழியர்கள் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக ரகுராமன் வேலைக்கு சென்றிருந்த மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி ஊழியர்களின் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Next Post

பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து..!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் பலி..!! கிருஷ்ணகிரியில் சோகம்..!!

Sat Jul 29 , 2023
கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வெடித்து சிதறிய தீப்பிழம்புகள் உணவகத்தின் அருகில் உள்ள பட்டாசு குடோனுக்கும் பரவியது. இதில் அங்கிருந்த பட்டாசுகளில் தீ பற்றவே அவை பெருமளவில் வெடித்து சிதறியிருக்கின்றன. […]

You May Like