fbpx

சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஒய்.எஸ்.ஷர்மிளா…! கைது செய்த காவல்துறை…!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து காவல்துறையினரைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ் அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில், சர்மிளா மீது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை தாக்கியதாகவும், போலீஸ் கான்ஸ்டபிள் மீது அவரது வாகனத்தை மோதி, காலில் காயம் ஏற்படுத்தியதாகவும், போலீஸ் அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் கைது செய்யப்பட்ட ஷர்மிளாவை சந்திக்க சென்ற ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையம் அருகே நடந்த மோதலின் போது ஷர்மிளாவின் தாய் ஒய்.எஸ்.விஜயம்மாவும் ஒரு பெண் காவலரை அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Vignesh

Next Post

அட ச்சீ...! மது போதையில் விமான பயணிகள் மீது சிறுநீர் கழித்த நபர்...! FIR பதிவு செய்த அதிகாரிகள்...!

Tue Apr 25 , 2023
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மூலம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் போதையில் இருந்த பயணி ஒருவர், சக பயணி மீது சிறுநீர் கழித்த குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. விமான நிறுவனம் சக பயணிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்து சட்ட அமலாக்கத்திடம் ஒப்படைத்ததாக கூறிய டிஜிசிஏ, இது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் […]

You May Like