ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் அமெரிக்காவில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தனது உயிரை காப்பாற்ற வேண்டி, அந்த மாணவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது . தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் இந்தியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இவரை […]

இரண்டாவது திருமணம் செய்ய விரும்பிய கணவன், முதல் மனைவி மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு மொட்டை அடித்து, தெருத்தெருவாக இழுத்துச் சென்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர சினிமாவின் துணை நடிகரான அவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெடகொண்டேபுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அபிராம் என்கிற ராம்பாபு (33). ஆந்திர சினிமாவில் துணை நடிகராக பணிபுரிந்து வருகிறார். தன்னுடன் பணியாற்றிய ஆஷா […]

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் பட்டம் விட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஹைதராபாத் அருகே உள்ள ஏத்தாப்பூர் கிராமத்தில் 15 வயது சிறுவனான தன்ஷிக் தனது பேர் குடும்பத்தாருடன் பட்டம் விட்டு விளையாடி இருக்கிறான். அப்போது சிறுவன் வெட்ட பட்டம் மின்கம்பியில் உரசியதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கிய சிறுவன் தூக்கி வீசப்பட்டிருக்கிறான் . இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் […]

ஹைதராபாத் நகரில் இறந்த பெண்ணின் சடலத்துடன் தாயும் சகோதரனும் 5 நாட்கள் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள குடியிருப்பின் ஒரு வீட்டில் ஆள் நடமாட்டமில்லாமல் இருந்ததோடு அழுகிய வாடையும் அடித்ததால் அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூட்டியிருந்த வீட்டின் கதவை […]

ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் காலமானார். ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பி.எஸ். ராவ் என்று அழைக்கப்படும் போப்பனா சத்யநாராயண ராவ், ஹைதராபாத்தில் குளியலறையில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 76 வயதான அவருக்கு ஜான்சி லட்சுமி பாய் என்ற மனைவியும், சுஷ்மா மற்றும் சீமா என்ற இரு மகள்களும் உள்ளனர். அவரது உடல் […]

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து காவல்துறையினரைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில், சர்மிளா மீது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை தாக்கியதாகவும், போலீஸ் கான்ஸ்டபிள் மீது அவரது வாகனத்தை மோதி, காலில் காயம் ஏற்படுத்தியதாகவும், போலீஸ் அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கைது […]

விநாயக் என்பவர் ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் உள்ள இன்ஸ்பயர் வெப்ஸ் என்ற இணையதளம் மூலமாக கோடிக்கணக்கான தனி நபர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடி இருக்கின்றார். அதோடு அவற்றை பலருக்கு விற்பனை செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாட்டில் 8 மெட்ரோ நகரங்கள் உட்பட 24 மாநிலங்களில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக திருடி அவற்றை விற்பனையும் செய்துள்ளார். இவரை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் சைபர் […]

சிறுதானிய மனிதர் என்று அனைவராலும் அறியப்பட்ட பிவி சதீஷ் காலமானார். தெலுங்கானா மாநிலத்தின் ஜஹீராபாத்தை தளமாகக் கொண்ட டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டியின் நிறுவனர் பிவி சதீஷ். 77வது வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தெலுங்கானாவின் சிறுதானிய மனிதர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து […]

தற்காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரித்து வருகிறது. உறவு முறைகளை எல்லாம் ஒரு பொருட்டே மதிக்காமல் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் போக்கு தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இது போன்ற ஒரு கொடூர சம்பவம் தான் ஹைதராபாத் நகரில் நடைபெற்றிருக்கிறது. தனது மனைவியின் குழந்தையை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது ஹைதராபாத் நீதிமன்றம். ஹைதராபாத்தைச் சார்ந்த நபர் […]

ஐதராபாத்தில் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மல்காஜ்கிரி புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் யாதவ். 38 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பேட்மிண்டன் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள ஷியாம் யாதவ், பணி முடிந்து தினமும் சக ஊழியர்களுடன் […]