fbpx

ஆஹா…! மின் இணைப்பு வேண்டுமா…? ஆன்லைன் மூலமாகவே நீங்க விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம் இதோ…!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

2022 – 2023ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மோட்டார் குதிரை திறனுக்கேற்ப 90 % அல்லது அதிகபட்சமாக 3.60 லட்சம் ரூபாய் வரை மானியத்தில் 900 ஆதிதிராவிடர் மற்றும் 100 பழங்குடியினர் என மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளாகவும், விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5HP (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் 2.50 லட்சம் ரூபாயில் பயனாளி 10 % பங்குத்தொகை 25,000 ரூபாயும், 7.5HP மின் இணைப்பு கட்டணம் 2.75 லட்சம் ரூபாயில் பயனாளி 10 % பங்குத்தொகை 27,500 ரூபாயும், 10HP மின் இணைப்புக் கட்டணம் 3 லட்சம் ரூபாயில் பயனாளி 10 % பங்குத்தொகை 30,000 ரூபாய் வழங்கப்படும்.

மேலும் 15HP மின் இணைப்புக் கட்டணம் 4 லட்சம் ரூபாயில் பயனாளி 10 % பங்குத்தொகை 40,000 ரூபாய் என்ற விகிதத்தில் மாவட்ட மேலாளர், தாட்கோ, அரியலூர் என்கிற முகவரிக்கு வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10% திருப்பி அளிக்கப்படும். 2017 – 2022ஆம் ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலளாரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 % பயனாளி பங்குத்தொகையுடன் புதியதாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், “அ” பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை!... சச்சின், டிராவிட், தோனி வரிசையில்!... கோலியை முந்தும் ரோகித் ஷர்மா!

Sun Mar 12 , 2023
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17,000 ரன்களை கடந்த 6வது இந்திய அணி வீரர் என்ற புதிய சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ரோஹித் ஷர்மா 2007ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். வலது கை ஆட்டக்காரரான ரோஹித் சர்மா, இந்திய அணியின் வெற்றிகளில் கணிசமாக பங்களித்துள்ளார். 49 டெஸ்ட், 241 ஒருநாள் மற்றும் 148 டி20 போட்டிகள் ஒட்டுமொத்தமாக 438 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள […]

You May Like