fbpx

’ஆன்லைன் ரம்மியில் வென்ற பணம் முழுவதும் கிடைக்காது’..!! ’இது ஒன்றும் திறமைக்கான விளையாட்டு அல்ல’..!! தமிழ்நாடு அரசு

பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்தது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்தது. அந்த வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தன் வாதத்தில் கூறியிருப்பதாவது:- பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்தது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். ஆன்லைன் விளையாட்டுகளை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும்.

ஆன்லைன் ரம்மியில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடுவோரின் அறிவுத்திறன் சரிபார்க்கப்படுவது எப்படி என்பதை அந்த நிறுவனங்கள் விளக்கவில்லை. ஆன்லைன் ரம்மியில் வென்ற பணம் முழுவதையும் பெற முடியாது.

ஆன்லைன் விளையாட்டில் பரிசு பெறுவோருக்கு கிடைக்கும் பரிசுத் தொகையில் ஒரு பகுதி நிறுவனத்திற்கு செல்கிறது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் முன்வைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

ஓட்டுநருடன் உல்லாசம் செய்த மனைவியை கண்டித்த கணவன் கொலை

Mon Aug 7 , 2023
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ், அங்குள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி ஷுவானிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஷிவானிக்கும் அருகே வசித்து வந்த கார் ஓட்டுநரான ராமாராவ் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரமேஷுக்கு தெரிய வந்த நிலையில், அவர் இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் ரமேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். […]

You May Like