fbpx

கன்னியாகுமரி பெட்ரோல் பங்க் கழிவறைக்குள் கேட்ட சத்தம்…! வசமாக சிக்கிக் கொண்ட இளம் ஜோடி… அரைகுறை ஆடையுடன் ஓட்டம்.!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கின் கழிவறையில் இளம் காதல் ஜோடி அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த இளம் ஜோடியை தேடி வருகின்றனர்.

கடந்த 20ஆம் தேதி அன்று மாலை நேரத்தில் பைக்கில் வந்த 23 வயது மதிக்கத்தக்க இளம் ஜோடி பேருந்து நிலையம் அருகே இருந்த பெட்ரோல் பங்கிற்கு வந்தது. அந்த இளம் பெண் கழிவறையை பயன்படுத்திக் கொள்ள பெண் ஊழியரிடம் அனுமதி கேட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த ஊழியரும் சம்மதித்துள்ளார். அந்த இளம் பெண் டாய்லெட் இருக்கு உள்ளே சென்றதும் அந்த இளைஞர் வெளியே நின்று இருக்கிறார்.

திடீரென மெதுவாக கதவை திறந்த அந்த இளம் பெண் தன் காதலனையும் கழிவறைக்குள் அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வேகமாக அந்த இளைஞரும் டாய்லெட்டிற்குள் புகுந்து இருக்கிறார். உள்ளே சென்று இருவரும் லூட்டி அடித்திருக்கின்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கூச்சலிடவே அருகில் இருந்தவர்களும் வந்து கழிவறையின் கதவை தட்டி இருக்கின்றனர்.

இதனால் அதிர்ச்சடைந்த காதல் ஜோடி பத்து நிமிடங்களுக்கு பிறகு அரைகுறை அடையுடன் வெளியே வந்திருக்கிறது. உடனே சுற்றி இருந்தவர்கள் அவர்களை நிறுத்தி கேள்வி கேட்டுள்ளனர். இதனால தாங்கள் விபரீதத்தில் மாட்டிக் கொண்டதை உணர்ந்த ஜோடி தங்களது பைக்கை விட்டுவிட்டு நைசாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களது பைக்கை மட்டும் எடுத்துச் சென்றனர். காவல்துறையின் விசாரணையில் அவர்கள் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்திருக்கிறது. காவல்துறை அந்த ஜோடியை வலை வீசி தேடி வருகிறது.

Kathir

Next Post

சித்த வைத்தியர் வீட்டை, தோண்ட தோண்ட எலும்புகள்..! கொலையில் முடிந்த ஓரினச்சேர்க்கை..!

Wed Nov 22 , 2023
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் சித்த வைத்தியர் கைது, மேலும் கைதான சித்த வைத்தியர் வீட்டை சுற்றி ஏராளமான எலும்புகள் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் அசோக்ராஜ். இவர் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 11ம் தேதி தீபாவளி கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி […]

You May Like