fbpx

ஆபாச படங்கள் எடுத்து இளம் பெண்களுக்கு மிரட்டல்.! கைது செய்யப்பட்ட 24 வயது காதல் மன்னன்.!

பல பெண்களுடன் பழகியவர்களை காதலிப்பது போல் நடித்து அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை அடுத்துள்ள ஆரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. அவரது மனைவி அலமேலு. இந்த தம்பதியினருக்கு அருண் பிரசாத் என்ற 24 வயது மகன் இருக்கிறான். இந்நிலையில் அண்ணாமலை இறந்து விட்ட நிலையில் அலமேலு வெளிநாட்டில் தங்கி பணியாற்றி வருகிறார். மகன் அருண் பிரசாத் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் பல பெண்களுடன் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. மேலும் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் பெண்களை தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து அவர்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி மாணவி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை செய்ததில் பல அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தப்பியோடிய அருண் பிரசாத்தை வெளி மாநிலத்தில் கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை. மேலும் அந்த இளைஞரின் செல்ஃபோனை ரெக்கவரி செய்தபோது அதிலிருந்து பல பெண்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

பட்டப்பகலில் பயங்கரம்..!! சென்னையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை..!!

Wed Dec 20 , 2023
சென்னை பாரிமுனை வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் ரவுடி பிரேம்குமார். இவரதுமனைவி ராஜஸ்ரீ. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருக்கும் புளியந்தோப்பைச் சேர்ந்த ரவுடி சேட்டு கும்பலுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று (டிச.20) பிரேம்குமார் அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு வந்தார். அவரது கூட்டாளிகள் வசந்தகுமார், நரேஷ்குமார் ஆகியோரும் உடன் வந்தனர். கொலை வழக்கு விசாரணைக்காக ஆஜராகி விட்டு, பெரியமேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரிப்பன் மாளிகை மற்றும் […]

You May Like