fbpx

அரியலூர் | ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலியை நடு ரோட்டில் விட்டுச்சென்ற காதலன்…..!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே திருச்சி, சிதம்பரம் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆகவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதோடு அந்த இளம் பெண் யார் என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் இவருடைய மகள் தான் அபிநயா (23) இவர்தான் உயிரிழந்தார் என்பதும் தெரிகிறது இவர் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பார்த்திபன் (33) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் 2 வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்து வந்தது இதற்கு நடுவே பார்த்திபனுக்கு அவருடைய பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். இதனை அறிந்து கொண்ட அபிநயா, அதிர்ச்சி அடைந்து உடனடியாக பார்த்திபனை செல்போனில் தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

பின்னர் அபிநயாவை சமாதானம் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார் அப்போது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வந்து கொண்டிருந்த சமயத்தில் திருச்சி, சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவரில் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது. அப்போது காப்பாற்ற யாரும் இல்லாததால் ரத்த தானத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அபிநயாவை அங்கேயே விட்டுவிட்டு தான் மட்டும் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற தெரிவித்துள்ளார் அந்த நபர்.

ஆனால் உண்மையிலேயே விபத்து காரணமாக, ஏற்பட்ட காயத்தால் தான் அபிநயா உயிரிழந்தாரா? அல்லது தன்னுடைய திருமணத்திற்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக காதலியை நேரில் வரவழைத்து அவரை கொலை செய்து விட்டு பார்த்திபன் நாடகம் ஆடுகிறாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

செல்லப்பிராணிக்கு ரூ.16.5 லட்சம் செலவில் சொகுசு வீடு..!! அனைவரது கவனத்தையும் ஈர்த்த யூடியூபர்..!!

Fri Jun 2 , 2023
செல்லப்பிராணிக்கு ரூ.16.5 லட்சம் மதிப்பிலான சொகுசு வீட்டை யூடியூபர் ஒருவர் பரிசளித்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மனிதர்கள் அதிகம் விரும்பும் செல்லப்பிராணிகளின் பட்டியலில் நாய்கள் எப்போதும் முதலிடத்தில் உள்ளன. மக்கள் தங்களுக்கான ஒரு வசதியான வீட்டைக் கட்ட வேண்டும் என்று கனவு காண்பது வழக்கம். ஆனால், அமெரிக்காவில் பிரபல யூடியூபர் ப்ரெண்ட் ரிவேரா தனது செல்லப்பிராணிக்கு ரூ.16.5 லட்சம் மதிப்பிலான சொகுசு வீட்டை பரிசாக அளித்துள்ளார். அவரது […]
செல்லப்பிராணிக்கு ரூ.16.5 லட்சம் செலவில் சொகுசு வீடு..!! அனைவரது கவனத்தையும் ஈர்த்த யூடியூபர்..!!

You May Like