fbpx

#திண்டுக்கல்: மிஸ்டு கால் நம்பி வாழ்க்கையை இழந்த இளம்பெண்.. நெருக்கமாக இருந்து விட்டு மாயமான திருமணமான நபர்..! 

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நத்தம் கிராமத்தில் கிழவன்அம்பலம் என்பவரின் மகன் கார்த்திக் (31) எனபவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 

கார்த்திக்கிற்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு மிஸ்டு கால் அளித்ததன் மூலம் இவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

திருப்பூரில் வேலைபார்த்து வந்த அந்த பெண் கடந்த தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு கார்த்திக் உடன் செல்போனில் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளார். 

திருமணமானதை மறைத்து கார்த்திக் அப்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். கடந்த 9-ம் தேதி, அப்பெண்ணை கோபால்பட்டி வருமாறு கார்த்திக் அழைத்துள்ளார். அங்கே வந்த பெண்ணுடன் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி குடுத்து நெருக்கமாக இருந்துள்ளார். 

இதனையடுத்து 10-ம் தேதியில் இருந்து கார்த்திக் மாயமாகி விட்டார். செய்வதறியாது திகைத்து நின்ற பெண்ணை, அவரது பெற்றோரை வரவழைத்து ஊர் மக்கள் அனுப்பி வைத்தனர். இது பற்றி காவல்துறையில் அந்த பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர்.

Rupa

Next Post

உல்லாசத்தின்போது வந்த யோசனை..!! உடனே களத்தில் இறங்கிய கறிக்கடை உரிமையாளர்..!! காரியம் முடிந்தவுடன் கசமுசா..!!

Fri Jan 13 , 2023
சென்னை புறநகரில் பகுதியில் பம்மல் ஆதாம் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சின்னப்பொன்னன் (80). இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், தனது வீட்டின் அருகே இருந்த ஆடுகள் திடீரென மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, சந்தேகமடைந்த சின்னப்பொன்னன், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், சிவப்பு நிற காரில் வந்த பெண் உள்பட 2 பேர் ஆடுகளை திருடி செல்லும் […]

You May Like