நாடெங்கிலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு மருத்துவர் ஒருவரின் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்திர பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சார்ந்த மருத்துவர் ஒருவரின் மகள் தன் நண்பர்களாலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலம் பார்ரா மாவட்டத்தைச் சார்ந்த மருத்துவர் ஒருவருடைய மகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாக இருக்கிறார் வினய் என்ற இளைஞர்.
இருவரும் நன்றாக நட்புடன் பழகி இருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பெண்ணை ஹூக்கா பார்லருக்கு வருமாறு அழைத்திருக்கிறார் வினய். இதனைத் தொடர்ந்து நண்பர் தானே என இந்தப் பெண்ணும் சென்று இருக்கிறார். அங்கு குளிர்பானத்தில் போதை மருந்துகளை கலந்து இந்தப் பெண்ணுக்கு குடிக்க கொடுத்திருக்கிறார். போதை மருந்து கலந்த குளிர்பானத்தை குடித்த பெண் சுயநினைவை இழந்துள்ளார். மயக்கமடைந்த பெண்ணை வெறிச்சோடி ஒரு பகுதிக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை காவல்துறையில் புகார் செய்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.