காஞ்சிபுரத்தைச் சார்ந்த 23 வயது இளைஞரை தந்தையும் மகனும் சேர்ந்து படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சின்ன காஞ்சிபுரம் அமுதன் தெருவை சார்ந்தவர் செல்வம் இவரது மகன் தமிழ்வாணன் வயது 23. டிப்ளமோ முடித்துள்ள இவ்வாறு அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும் சதாவரம் பகுதியைச் சார்ந்த தினகரன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்றிரவு தனது நண்பனை காண்பதற்காக சதாவரம் பகுதிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார் தமிழ்வாணன். அவர் சதாவாரம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது இரு சக்கர வாகனத்தை மரித்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த தமிழ்வாணனை அருகில் இருந்தோர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் தமிழ்வாணன் .
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் காந்திபுரம் பகுதியைச் சார்ந்த குணசேகரன் மற்றும் அவரது தந்தை ரகு ஆகிய இருவரும் தான் தமிழ்வாணனை வெட்டி கொலை செய்தார்கள் என்று தெரியவந்தது. இவர்கள் இருவரின் மீதும் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. தப்பியோடிய இவர்கள் இருவரையும் காவல்துறையை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. எந்த காரணத்திற்காக தமிழ்வாணன் கொலை செய்யப்பட்டார் ? இவர்கள் இருவருக்கும் இடையே ஏதேனும் முன்பாக இருக்கிறதா என்று ரீதியில் தீவிரமான விசாரணையில் இறங்கி இருக்கிறது காவல்துறை.