fbpx

’ஜாமீனுக்கு பின் உங்க நடவடிக்கையே சரியில்ல’..!! ’இன்னும் 10 நாள் தான் டைம்’..!! எச்சரித்த சுப்ரீம் கோர்ட்..!! மீண்டும் கைதாகிறார் செந்தில் பாலாஜி..!!

ஜாமீனுக்குப் பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜாமீனில் வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்த சில தினங்களிலேயே மின்சாரத்துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்திருந்தது. மேலும், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீனுக்கு பின் செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இன்னும் 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அவகாசம் வழங்கப்படாது” என்று நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, செந்தில் பாலாஜி பதில்மனு தாக்கல் செய்யவில்லை என்றால், அவருடைய ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கைதாக வாய்ப்புள்ளது.

Read More : சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடை, மலம் வீச்சு..!! கொடூரத்தின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு..!! எடப்பாடி பழனிசாமி பகிரங்க எச்சரிக்கை..!!

English Summary

The Supreme Court has expressed dissatisfaction with Minister Senthil Balaji’s actions after bail, saying they are unacceptable.

Chella

Next Post

சிமெண்ட் இல்லை.. செங்கல் இல்லை.. கற்களால் மட்டுமே கட்டப்பட்ட பிரம்மாண்ட பங்களா..!! இணையத்தில் வைரலாகும் பெங்களூரு வீடு..!!

Mon Mar 24 , 2025
Bengaluru’s Zero-Cement Stone House Is Blowing People’s Minds, Is It The Future Of Sustainable Homes?

You May Like