fbpx

பிளாக் மெயில் செய்து தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்….! ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்….!

ராஜஸ்தான் மாநிலத்தில் சுரூ என்ற மாவட்டத்தில் இருக்கின்ற ரத்தன்க்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 19 வயதான இளம் பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். அந்தப் பெண்ணின் வீட்டருகே அதனுடைய பெரியப்பா மகனும் வசித்து வந்தார். சகோதரர் உறவுமுறை என்பதால் அந்த பெண்ணின் வீட்டிற்கு அந்த இளைஞர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

2 வருடங்களுக்கு முன்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கம் போல சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த இளைஞர் அப்போது அந்த இளம் பெண் தனிமையில் இருந்ததை அறிந்து கொண்ட அந்த இளைஞர் பலவந்தமாக அந்த பெண்ணை பாலியல் வன்கொடைமிக்க ஆளாக்கி இருக்கிறார். அத்துடன் அதனை கைபேசியில் வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறார்.

மேலும் இந்த விவகாரத்தை வெளியே தெரிவித்தால் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டிய வாலிபர், அதனை வைத்து பிளாக்மெயில் செய்து தொடர்ந்து, அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருக்கிறார். சுமார் 2 வருடங்கள் பயத்துடன் இருந்த அந்த இளம் பெண் அண்ணனின் பாலியல் வன்கொடுமையை அனுபவித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அந்த இளம் பெண் மனம் உடைந்து காணப்பட்டார். ஆகவே அந்த பெண்ணின் தாயார் அதனை புரிந்து கொண்டு அந்த பெண்ணிடம் விசாரித்து இருக்கிறார். அப்போதுதான் தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் சொல்லி அழுதுள்ளார். அந்த இளம் பெண் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாய் உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இதனை தொடர்ந்து, ரத்தன்கர்நிலையத்தில் இளம்பெண் புகார் வழங்கினார்.

அதனை அடிப்படையாகக் கொண்டு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மிக விரைவில் அந்த பெண்ணுக்கு நீதி பெற்று தருவோம் என்று காவல்துறை அதிகாரி சுபாஷ் அந்த பெண்ணின் பெற்றோருக்கு உறுதி அளித்திருக்கிறார்.

Next Post

செம குட் நியூஸ்..!! மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி..!! புதுச்சேரி அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

Wed May 31 , 2023
பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதியை தவிர்த்து ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது போலவே, புதுச்சேரி அரசும் அறிவித்திருந்தது. தற்போது மேலும் ஒரு புதிய அறிவிப்பை அம்மாநில உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட 1 முதல் 9ஆம் […]

You May Like