fbpx

204 நிலக்கரி சுரங்கங்கள் ரத்து…! இறுதி பயன்பாடுகளுக்காக ஏலம்…! மத்திய அரசு தகவல்….!

2014-ம் ஆண்டில் 204 நிலக்கரி சுரங்கங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர், நிலக்கரி சுரங்கங்கள் வெளிப்படையான நடைமுறை மூலம் மற்றும் மின்சாரம் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத துறைகள் என பல்வேறு இறுதி பயன்பாடுகளுக்காக ஏலம் விடப்படுவதாக நிலக்கரி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏல அடிப்படையிலான தருணம் நிறைவடைந்த பின்னர், நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் நிலக்கரி இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடன், 2020-ம் ஆண்டில் வணிக சுரங்கத்திற்கு நன்கு பரிசீலிக்கப்பட்ட மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கொள்கை கொண்டு வரப்பட்டது.

வணிக ரீதியான நிலக்கரிச் சுரங்கங்களின் ஏல முறையின்படி, ஒரு சுரங்கத்திற்கு, தொழில்நுட்பத் தகுதி பெற்ற இரண்டு ஏலதாரர்களுக்குக் குறைவாக இருந்தால், அந்த சுரங்கத்திற்கான ஏலத்தின் முதல் முயற்சி ரத்து செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் ஏலத்தின் இரண்டாவது முயற்சி தொடங்கப்படலாம். இருப்பினும், இரண்டாவது முயற்சியில் மீண்டும் ஒரு ஏலதாரர் மட்டுமே இருந்தால், சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக பொருத்தமான முடிவுக்காக இந்த விவகாரம் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவுக்கு அனுப்பப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் வந்த வினை..!! காவல்துறையின் வலையில் சிக்கியது எத்தனை பேர்..?

Mon Nov 13 , 2023
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுவை குறைப்பதற்காக தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. அரசின் இந்த அறிவுறுத்தலை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதில் அதிக அளவில் சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்ததாக […]

You May Like