TVK | “விஜய் எதிர்காலத்திற்கு புஸ்ஸி ஆனந்த் மிகப்பெரிய ஆபத்து”… எஸ்.ஏ சந்திரசேகர் அதிர்ச்சி பேட்டி.!!

TVK: விஜய் எதிர்காலத்திற்கு புஸ்ஸி ஆனந்த் மிகப்பெரிய ஆபத்தாக இருப்பார் என தளபதி விஜயின்(VIJAY) தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்(SAC) தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி இவரது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம்(TVK) என பெயரிடப்பட்டது. இவரது கட்சி 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் தளபதி விஜய்(VIJAY) தனது கட்சி தொடர்பான கூட்டங்களையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் செயற்கைக்கான செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் இணைய முற்பட்டதால் முடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். இவர் தான் விஜய்க்கு அரசியல் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.புஸ்ஸி ஆனந்தாள் விஜயின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்(SAC) தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.புஸ்ஸி ஆனந்தின் உண்மை முகம் தெரியாமல் விஜய் அவருடன் நட்பு பாராட்டி வருவதாக SAC தெரிவித்துள்ளார்.

புஸ்ஸி ஆனந்தின் நாடகம் பற்றி தெரியாமல் விஜய் அவருக்கு பக்கபலமாக இருந்து வருவது விஜயின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல எனவும் அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார். தளபதி விஜயின் எதிர்காலம் குறித்த பயம் ஒரு தந்தையாக தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.புஸ்ஸி ஆனந்த் பற்றிய எஸ்ஏ சந்திரசேகரின் எச்சரிக்கை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Read More: Election 2024 | மதிமுகவை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் மறுப்பு.!! அதிருப்தியில் எதிர்க்கட்சிகள்.!!

Next Post

SRH vs MI: அபிஷேக் சர்மா, ஹெட் மரண அடி... கதி கலங்கிய மும்பை இந்தியன்ஸ்.!! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.!!

Wed Mar 27 , 2024
உலக கிரிக்கெட்டின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . ஐபிஎல் தொடரின் 8-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து இன்று விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச […]

You May Like