வாங்குறது ரூ.30 ஆயிரம் சம்பளம்..!! ஆனா பல கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல்..!! சிக்கிய அரசுப் பெண் ஊழியர்..!!

இந்தியாவில் லஞ்சம் என்பது பெரிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், சாதாரண அரசு ஊழியர் வீட்டில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப் பிரதேசத்தில் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பகீர் சம்பவம் நடந்துள்ளது. அங்கே அரசு அதிகாரி ஒருவரது வீட்டில் நடந்த ரெய்டில் 5-7 சொகுசு கார்கள் உட்பட 20 கார்கள், ₹30 லட்சம் விலையில் உயர் ரக 98 இன்ச் டிவி கைப்பற்றப்பட்டன. மேலும், அவருக்குச் சொந்தமாக 20000 சதுர அடி நிலம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனைக்கும் இவருக்குச் சம்பளம் வெறும் ₹30,000 ஆயிரம் தானாம். 36 வயதான இந்த மத்தியப் பிரதேச அரசு அதிகாரி தான் இப்போது ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் சிக்கியுள்ளார். மத்தியப் பிரதேச காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தில் உதவிப் பொறியாளரான ஹேமா மீனா கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

30 ஆயிரம் சம்பளத்தை மட்டுமே பெற்று அவர், தன் பெயரிலும் தனது குடும்பத்தினரின் பெயரிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். அவரது வளாகத்தை ஊழல் அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது குடியிருப்பில் 100 நாய்கள், வயர்லெஸ் தகவல் தொடர்பு அமைப்பு, மொபைல் ஜாமர்கள் என இருந்த வசதிகளைப் பார்த்து போலீசாரே மிரண்டுவிட்டனர். முதலில் சோலார் பேனலை ரிப்பேர் செய்யும் ஊழியர்கள் போலச் சென்ற அதிகாரிகள், அதிரடி சோதனையில் இறங்கினர். ஒரே நாளில் 7 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அவர்கள் கண்டுபிடித்தனர். இது அவரது வருமானத்தை விட 232 சதவீதம் அதிகமாகும்.

முதற்கட்ட விசாரணையில், மீனா தனது தந்தையின் பெயரில் 20,000 சதுர அடி விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். பின்னர் சுமார் ₹ 1 கோடி மதிப்பிலான பெரிய வீட்டைக் கட்டியிருக்கிறார். அந்த வீடு மட்டுமின்றி பல மாவட்டங்களில் நிலத்தையும் வாங்கி குவித்துள்ளார். மத்தியப்பிரதேச போலீஸ் வீட்டு வசதிக் கழகத்தின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும் பொருட்களை வைத்து அவர் தனது வீட்டைக் கட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், அறுவடை இயந்திரங்கள், கனரக விவசாய இயந்திரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

முதற்கட்டமாக அவரிடம் 5 முதல் 7 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண ஊழியர் வீட்டில் இப்படி பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

உறவினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அதிரடி கைது……! புதுக்கோட்டை அருகே பரபரப்பு….!

Fri May 12 , 2023
திருச்சி விமான நிலையம் அருகே இருக்கின்ற அவனியா நகரை சேர்ந்தவர் பாலசேகர் (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் தன்னுடைய உறவினரான கறம்பக்குடி கரு தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கவிதா (40) என்பவருக்கு புதுக்கோட்டை மேட்டுப்பட்டியில் ஜவுளி கடை வைத்து கொடுத்திருக்கிறார். அதோடு பல்வேறு தவணைகளில் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில்தான் கொடுத்த பணத்தை பாலசேகர் திருப்பி கேட்டிருக்கிறார். […]
gun shot

You May Like