குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இன்று தமிழகம் வரும் சி.பி.ராதாகிருஷ்ணன்.‌‌..!

CP Radhakrishnan 1757427859015 1

குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகிறார்.

குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகிறார். 3 நாள் பயணமாக தமிழகம் வரும் அவர், கோவை, திருப்பூர், மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அரசுமுறைப் பயணமாக செஷல்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு அதிபர் டாக்டர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். இன்று கோவை திரும்புகிறார். கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர், கோவையில் உள்ள கொடிசியா வர்த்தக மையத்தில் கோவை மக்கள் மன்றத்தின் சார்பில் குடியரசு துணைத்தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.


கோவை டவுன்ஹாலின் நகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர், பேரூர் மடத்திற்கு செல்லும் அவர், சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திலும் பங்கேற்கிறார். இன்று மாலை கோவையிலிருந்து திருப்பூர் புறப்பட்டுச் செல்லும் அவர், அங்குள்ள திருப்பூர் குமரன் மற்றும் மகாத்மா காந்தி சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். நாளை திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதுரை செல்லும் அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்கிறார். 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியிலும் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்கிறார்.

Vignesh

Next Post

அரசியல் பகையா..? பாஜக பிரமுகரை சுத்துப் போட்ட கும்பல்..!! ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பயங்கரம்..!! சிவகங்கையில் பதற்றம்..!!

Tue Oct 28 , 2025
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பொன்நகர் அல்லி அர்ஜுனா நகரைச் சேர்ந்த 34 வயதான பழனியப்பன் என்பவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நன்கு அறியப்பட்ட பழனியப்பன், பொறியியல் பட்டதாரி என்பதுடன், கட்டுமானத் தொழில் செய்து வந்தார். மேலும், இவர் பாஜக ஒன்றிய துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சம்பவத்தன்று, பழனியப்பன் பொன்நகர் பகுதியில் தான் ஈடுபட்டு வந்த கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக இருசக்கர […]
BJP 2025

You May Like