சென்னை மாநகர பகுதியில் உள்ள மேற்கு மாம்பலத்தில் கணவர், மனைவி வசித்து வந்த நிலையில் கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் பாத்ரூமில் குளித்துள்ளார். அதே பகுதி குடியிருப்பில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக மறைந்து இருந்து செல்போனில் அந்த பெண் குளிப்பதனை வீடியோவாக எடுத்து வந்துள்ளார்.
இதனை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டு உள்ளார். இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இளைஞனை மடக்கிப் பிடித்தனர். இதனிடையில் அப்பெண்ணின் கணவருக்கும் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்திய போது பெற்றோருடன் அதே பகுதியில் குடியிருந்து வரும் ஸ்ரீராம் என்கிற அந்த இளைஞர் தான் என்று தெரியவந்துள்ளது. மேலும் இவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனையடுத்து அவரின் செல்போனை ஆய்வு செய்த பொழுது அதில் நிறைய இளம் பெண்கள் குளியல் வீடியோக்கள் இருந்திருக்கிறது. இவ்வாறு செல்போனில் ரகசியமாக எடுத்த வீடியோக்களை இரவு நேரங்களில் தனியாக பார்த்து பார்த்து ரசித்து வந்துள்ளார் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.