மெகா நியூஸ்.. SSC – CGL பணிக்கு 20,000 காலியிடங்கள்…! அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு…! ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு…!

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த SSC – CGL தேர்வுக்குத்‌ தயாராகும்‌ தேர்வர்கள்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக நடத்தப்படும்‌ பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு பயன்பெறலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஒன்றிய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 20,000-ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌ பி மற்றும்‌ குரூப்‌ சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப்‌ பட்டப்படிப்பு அளவிலானஸ பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக 08:10.2022-க்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.


இத்தேர்விற்கான கல்வித்தகுதி சூறைந்தபட்சம்‌ ஏதாவது ஒரு பாடத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன்‌ 01.01.2022 அன்றைய நிலையில்‌ Sc,St பிரிவினர்‌ 35 வயதுக்குள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ 33 வயதுக்குள்ளும்‌ மற்றும்‌ பொதுப்பிரிவினர்‌ 30 வயதுக்குள்ளும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌, முன்னாள்‌ இராணுவத்தினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறைவிதிகளின்‌ படி வயது வரம்பில்‌ சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேதர்வுக்‌ கட்டணமாக ரூபாய்‌ 100/-நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. இதில்‌ பெண்கள்‌, எஸ்‌.சி, எஸ்‌.டி, வகுப்பினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஜசேலம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த தகுதியும்‌ விருப்பமும்‌ உள்ள பட்டதாரிகள்‌ அதிக அளவில்‌ இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்‌ வகையில்‌ சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ சேவை மையம்‌ அமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 11.10.2022 அன்று இலவச பயிற்சி வகுப்புகள்‌ துவங்கப்பட உள்ளன. மேலும்‌, விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில்‌ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்‌ என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இடி மின்னலுடன் கூடிய மழை...! இன்று இந்த 14 மாவட்டத்தில் மட்டும்...! வானிலை மையம் தகவல்...!

Mon Sep 26 , 2022
தமிழகத்தில் இன்று 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் […]
”மக்களே குடையை மறக்காதீங்க”..! அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிரட்டும் கனமழை..!

You May Like