மாராட்டிய மாநிலம் நாசிக்கின் பிம்பால்கான் டோல் கேட்டில் ஒரு பெண் ஊழியர் சுங்க கட்டணம் வசூலிதத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவரின் மனைவி காரில் வந்துள்ளார்.
அவர் டோல் கேட் கட்டணம் செலுத்த முடியாது என கூறி இருக்கிறார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பறகு அது மோதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சன்டை போட்டு கொண்டனர். இந்த சண்டையை அங்கு இருந்தவர்கள் இருவரையும் விலக்கி விடாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
மேலும் அதனை வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில், இரண்டு பெண்களும் ஒருவரையொருவர் முடியை இழுப்பதும், அறைவதும், தள்ளுவதுமாக சண்டை போட்டுக்கொண்டனர். மராத்தி மொழியில் அவர்கள் ஒருவரையொருவர் திட்டி கொள்கின்றனர்.