எலும்புக்கும், சருமத்திற்கும் அதிக நன்மைகள் தரும் கேரட் பால்!… எளிய ஹெல்த் ட்ரிங்ஸ் செய்ய ரெசிபி இதோ!

எலும்புகளுக்கும், சருமத்திற்கும் அதிக நன்மைகள் தரும் கேரட் பால் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், எலும்புகளைப் பாதுகாக்கவும் ஆரோக்கியமான உணவுகளை இளம் வயதில் இருந்தே பின்பற்ற வேண்டும் நம் உடலுக்கு உரிய கட்டமைப்பையும், வலிமையையும் வழங்குவது எலும்புகள் தான். தசைகளைப் பாதுகாக்கவும், உறுப்புகளைப் பாதுகாக்கவும் எலும்புகள் மிகவும் அவசியமானது. ஆனால் 30 வயதிற்கு மேல் எலும்புகள் தானாகவே பலவீனம் அடைவதோடு, எலும்பு நோய்த்தொற்று மற்றும் பேஜெட்டின் எலும்பு நோய் போன்றவற்றை நமக்கு ஏற்படுத்துகிறது. எனவே தான் சிறுவயதில் இருந்தே கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகளவில் உட்கொள்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனாலும் முறையாக பின்பற்றாதப் போது தான் மூட்டுவலி, கால் வலி, இடுப்பு வலி போன்றவை நமக்கு ஏற்படும்.

உடல் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும், பளபளப்பாக வைத்துக் கொள்ளவும் கேரட் சாறு பயன்படுகிறது. சருமத்திற்கு வெளிப்பூச்சாகவும் கேரட்டை பயன்படுத்தலாம். தினசரி ஒரு கிளாஸ் கேரட் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சருமம் பொலிவாகவும், சருமத்தில் உள்ள கருமை நிறம் நீங்கி நல்ல நிற மாற்றத்தையும் கொடுக்கும். புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கேரட் கொண்டிருப்பதால், இதிலுள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் ப்ரீ – ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடும் தன்மையை பெற்றிருக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை சரும சேதத்தைத் தடுக்கிறது. எனவே எலும்புகளுக்கும், சருமத்திற்கும் அதிக நன்மைகள் தரும் கேரட் பால் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கேரட் பால் செய்ய தேவையான பொருட்கள்: பால் – 1 லிட்டர், நாட்டு சர்க்கரை – 125 கிராம், ஏலக்காய் – 5 எண்ணம், கேரட் – 150 கிராம். செய்முறை: முதலில் கேரட்டை எடுத்து துண்டுகளாக நறுக்கி, மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து, சாறு எடுத்து கொள்ளவும். பின்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். மேலும், நன்கு பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது, சூடான பாலில் கரண்டியை வைத்து நன்கு கலக்கி கொண்டே இருக்கும் போது, அதில் அரைத்த கேரட் சாற்றை சேர்க்கவும். பின் கேரட்டானது நன்கு கொதிக்கும் போது, அதிலுள்ள சாறு இறங்கி பாலுக்கு நல்ல நிறத்தை கொடுக்கிறது. பின்பு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டால் நல்ல நறுமணமும்,சுவையும் தரும். பின்பு, கொதித்த பாலை இறக்கி, ஆற வைத்த பின்பு நன்கு வடிகட்டியதும் பேக்கிங் செய்து, குளிர் சாதன பெட்டியில் வைத்து, குளிர்ச்சியாக பருகலாம்.

1newsnationuser3

Next Post

உங்கள் கண்களுக்கு கீழ் இந்த பிரச்சனை ஏற்படுகிறதா?... எச்சரிக்கையுடன் இருங்கள்!... ஏன் தெரியுமா?

Mon May 15 , 2023
உங்கள் கண்களுக்குக் கீழே வீக்கம் தோன்றுவதற்கு தூக்கமின்மை மட்டுமே காரணம் அல்ல. அப்படி உருவாகுவதற்கு வேறு என்ன காரணமாக இருக்கலாம் என்பதைக் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் கண்களை அடிக்கடி சுத்தம் செய்யும் போது உங்கள் கண்கள் வீங்கி இருக்கலாம். மேலும் உங்கள் கண்களை அதிகமாகவும், கடினமாகவும் தேய்க்கும் போது எரிச்சல் உண்டாகலாம். இதனால் உங்கள் கண்களுக்கு கீழே வீக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் உங்கள் கண்களை கடினமாக தேய்க்கும்போது, சிறிய […]

You May Like