தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தி வரும் பிரச்சாரக் கூட்டத் தொடரின் 3ஆம் கட்டம் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடந்தது. ஆனால், கரூரில் கட்டுக்கடங்காத கூட்டத்தால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் பிரச்சாரத்துக்காக தொண்டர்களும் ரசிகர்களும், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும், அதிகாலை முதலே திரண்டு இரவு வரை காத்திருந்தனர். விஜய்யின் பிரச்சார வாகனம் […]

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று கரூரில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அவர்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலரும் அடங்குவர். மேலும், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதற்கிடையே, தவெகவினர் யாரும் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாகவோ நிற்கவில்லை என […]

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று கரூரில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் துயரத்தில், அண்மையில் திருமண நிச்சயம் முடிந்திருந்த ஒரு இளம் ஜோடி உயிரிழந்த சம்பவம், மிகுந்த உருக்கத்தை அளித்துள்ளது. கரூரைச் சேர்ந்த 24 வயதான ஆகாஷ் என்பவருக்கும், 24 வயதான கோகுலஸ்ரீ என்பவருக்கும் சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயம் […]

கரூரில் 39 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது. தவெக தலைவர் விஜய் நேற்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் […]

மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், இந்தியப் புள்ளியியல் கழக மசோதா, 2025-ன் வரைவைப் பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்காக வெளியிட்டுள்ளது. முன்-சட்டமியற்றும் கலந்தாய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக அனைத்து பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகளும் ஆலோசனைகளும் வழங்கலாம் என தெரிவித்துள்ளது. இந்தியப் புள்ளியியல் கழகம் டிசம்பர் 1931-ல் நிறுவப்பட்டது. அன்று முதல், இது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்கக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. 2020-ல் டாக்டர் ஆர்.ஏ. […]

மத்திய அரசின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), அதன் சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் இருப்பை சரிபார்க்கும் முறையை எளிமையாக்கும் வகையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சந்தாதாரர்கள் தாங்கள் செலுத்திய மற்றும் நிறுவனம் பங்களித்த தொகையை மிக எளிமையான முறையில் தெரிந்து கொள்ளலாம். நீண்ட காலத்திற்கு பிஎஃப் கணக்கை சரிபார்க்காமல் இருந்தால், நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல் போகும் நிலை போன்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால், […]