தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் வேளையில், அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்கள் மீண்டும் புதிய திருப்பத்தை எட்டியுள்ளன. குறிப்பாக, பிரிந்து கிடக்கும் நிர்வாகிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னெடுத்து வரும் சமரச முயற்சிகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. தென் மாவட்ட வாக்கு வங்கியை தக்கவைக்கவும், அதிமுக-வை பலமான சக்தியாக உருவெடுக்க வைக்கவும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி என்ற தாரக […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் கறையாக படிந்துள்ள கரூர் வேலுசாமிபுரம் சம்பவம் தொடர்பான விசாரணை, இப்போது டெல்லி சிபிஐ (CBI) தலைமையகத்தில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் […]
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், தற்போது அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. கடந்த டிசம்பர் 12, 2025 அன்று சென்னையில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இதன் மூலம் கூடுதலாக 1,69,4339 பெண்கள் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 1,30,69,831 பயனாளிகள் மாதம் 1,000 […]
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, புதுச்சேரி மற்றும் அதன் அண்டை மாவட்டமான காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த முன்னறிவிப்பை தொடர்ந்து, நேற்று இரவு முதல் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விடாது பெய்து வரும் இந்த மழையினால் சாலைகளில் வெள்ளம் […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடப் பங்கீடு தொடர்பான விவாதங்கள் இப்போதே அனல் பறக்க ஆரம்பித்துள்ளன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்பே அதிமுக தலைமைக்கு அதிரடியான சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, வரும் தேர்தலில் தேமுதிக போட்டியிட 30 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதோடு, ஒரு […]
தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீண்டும் ஒருமுறை இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பது கடலோர கிராமங்களில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நேற்று முன்தினம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் நெடுந்தீவு அருகே தங்களது மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டியதாகக் குற்றம் சாட்டி […]
அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில், ரயில் பயணத்தில் பொதுவாகக் காணப்படும் RAC வசதியை கொண்டிருக்காது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட்டுகளின் விலை, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற தற்போதுள்ள பிரீமியம் ரயில்களை விட சற்றே அதிகமாக இருக்கும். மேலும், பயணிகள் குறைந்தபட்சம் 400 கி.மீ தூரத்திற்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு இணையான தொகையை செலுத்த வேண்டியிருக்கும். முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அடுத்த […]
ஜோதிடத்தின்படி, கிரகங்கள் காலப்போக்கில் தங்கள் நிலைகளை மாற்றிக்கொள்கின்றன. சில சமயங்களில் அவை மற்ற கிரகங்களுடன் இணைகின்றன. இது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிப்ரவரி மாதத்தில், புதன் மற்றும் ராகுவின் சேர்க்கை நிகழவிருக்கிறது. இந்த சேர்க்கை 18 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் நிகழப்போகிறது. இதன் விளைவாக, சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கப் போகிறது. அப்படியானால், அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.. மிதுனம் புதன் மற்றும் ராகுவின் சேர்க்கை […]
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், தவெக நிர்வாகிகள், கரூர் மாவட்ட காவல்துறையினர், பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என பலேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.. கரூரில் உள்ள […]
வாஸ்து சாஸ்திரம் வீட்டில் உள்ள பொருட்களை அமைக்கும் முறைகளையும், அவற்றின் விளைவுகளையும் விவரிக்கிறது. இதில் சமையலறை வாஸ்து மிகவும் முக்கியமானது. ஏனெனில் சமையலறை என்பது வீட்டின் ஆற்றல் மையம், அது முழு குடும்பத்திற்கும் ஆற்றலை வழங்கும் ஒரு இடம். சமையலறை வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டால், அது வீட்டிற்கு மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வத்தைக் கொண்டு வரும். இதில் ஏற்படும் ஒரு சிறிய கவனக்குறைவு கூட எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். சில […]

