தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னையில் நாளை கனமழை பெய்யும் என்றும் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் “ தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 5 மணி நேரமாக மணிக்கு 15 கி.மீ வேகத்தில் […]

வெள்ளிக்கிழமை, ஈரானில் மக்கள் மீண்டும் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய மக்கள் இயக்கமாக இது உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டங்களை அடக்க அரசாங்கம் நாடு முழுவதும் இணைய சேவையை முடக்கிய நிலையில், இந்த ஒடுக்குமுறையால் ஏற்கனவே பல டஜன் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில், வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்தது என்பதற்கான கோபமே இந்த இயக்கத்தின் காரணமாக இருந்தது. […]

இந்திய அரசு 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது. இந்த முறை, பிப்ரவரி 1 ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக மத்திய பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுவது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். இதை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதிப்படுத்தியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ஆம் தேதி […]

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. குறிப்பாக காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி […]

தமிழர் திருநாளான பொங்கல் விழா வரும் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ‘ திராவிட பொங்கல் விழா’ கொண்டாட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.. அதன்படி திமுக சார்பில் மாவட்டம் தோறும் மாவட்டம் தோறும் திராவிட பொங்கல் விழா கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் […]

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளை எதிர்கொள்ளும் ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் ஒரு நற்செய்தி. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), பிப்ரவரி 1, 2026 முதல் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கான புதிய ஃபாஸ்டேக்குகளை வழங்குவதற்கான ‘உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்-KYV’ செயல்முறையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தச் சரிபார்ப்பு கட்டாயமாக இருந்தது. இது ஃபாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பிறகும் கூட, பல மணிநேர பின்தொடர்தல் மற்றும் தொந்தரவுகளுக்கு வழிவகுத்தது. இப்போது, […]

சென்னையில் அனுமதியின்றி மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல் ஆகியவற்றுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டு, குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.. பொது இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அத்துமீறி வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. அந்த […]

கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரனைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு விஜய்யின் பிரச்சார வாகனம் எடுத்து வரப்பட்டது. கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவின் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.. கரூர் சிபிஐ அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகள், […]

சமீபகாலமாக, செரிமானப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. காலையில் வயிறு சுத்தமாகவில்லை என்றால், அது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும், செரிமானப் பிரச்சனைகள் தொடர்ந்தால், பல நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தின்படி, எல்லா நோய்களுக்கும் மூல காரணம் நமது பலவீனமான செரிமான மண்டலம்தான். உணவு சரியாக செரிமானம் ஆகாததால், வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிற்றில் கனம் ஏற்படுகின்றன. சில இயற்கை மூலப்பொருட்கள் செரிமான மண்டலத்திற்குத் தீர்வாக அமைகின்றன.செரிமானப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. காலையில் […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து குறித்து மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். “அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிரீன்லாந்து குறித்து அமெரிக்கா ஏதாவது செய்யும்” என்று வெளிப்படையாக தெரிவித்தார். இந்தக் கருத்தை அவர் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை தலைமை நிர்வாகிகளுடன் நடந்த ஊடக சந்திப்பின் போது கூறினார். கிரீன்லாந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதற்கான காரணத்தை விளக்கிய டிரம்ப் “ நாம் கிரீன்லாந்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், […]