திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆறுதல் கூறினார். திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த வழக்கில் 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை […]

திரைப்பட நடிகர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பிரபலங்கள் தற்போது வருமானம் இல்லாமல் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது தான் இதன் மறுபக்கம். பெரும்பாலம் துணை நடிகை, நடிகர்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவுண்டமணியும் மற்றும் செந்திலுடன் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் தான் நடிகை வாசுகி. காரைக்குடியை பூர்விகமாக கொண்ட […]

சேலம் மேற்கு தொகுதியைச் சேர்ந்த பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையைத் தொடர்ந்து ஆதரித்து வந்த அருள், சமீபத்தில் ஒரு பேட்டியில், அன்புமணி ராமதாஸுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். “கட்சியில் ராமதாஸ் இருக்கும்வரை தலைவராக அவரே தொடர்வார், அதன் பிறகுதான் அன்புமணி பதவி […]

ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர் நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. Peak Hours எனப்படும் உச்ச நேரங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புதிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஓலா, உபர் நிறுவனங்கள் பீக் ஹவர் நேரங்களில் அடிப்படை கட்டணத்தை விட 2 மடங்கு வரை வசூலிக்கலாம்.. […]

3 உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று எய்ம்ஸ் மருத்துவர் எச்சரித்துள்ளார். நீங்கள் தினமும் சாப்பிடுவது உங்கள் நீண்டகால ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. குறிப்பாக புற்றுநோய் என்று வரும் போது அதில் உணவு மிகவும் முக்கியம்.. எந்த ஒரு உணவும் தானாகவே புற்றுநோயை ஏற்படுத்தவோ அல்லது தடுக்கவோ முடியாது என்றாலும், நிலையான உணவு முறைகள் நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்க முடியும.. பதப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு இறைச்சிகள், […]

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் அரசு திட்டங்களை கொண்டு செல்லும் பணியில் மக்கள் நல பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பணி நிரந்தரம், சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.. ஊரக வளர்ச்சி துறையிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த […]

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களுக்கும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) பிரேக்கிங் முறை கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது. ஏபிஎஸ் என்பது, வாகன ஓட்டுநர் அவசர நிலையில் திடீரென பிரேக் அடிக்கும்போது, சக்கரங்கள் லாக் ஆகாமல் தடுக்கக்கூடிய ஒரு […]

நேற்று முன் தினம் மாலை ​​ஜப்பான் ஏர்லைன்ஸ் போயிங் ட்ரீம்லைனர் 737 விமானம் திடீரென 26,000 அடி உயரத்தில் நடுவானில் கீழே விழப்போனதால், அதிலிருந்த பயணிகள் பீதியடைந்தனர். இதனால் பயந்துபோன பயணிகள் ஆக்ஸிஜன் முகமூடிகளை அணிந்துகொண்டனர்.. இதுவே தங்களின் இறுதி தருணங்களாக இருக்கலாம் என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்திலிருந்து டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்திற்குப் பயணித்த JL8696 விமானம், புறப்பட்ட […]