இன்றைய நவீன சமையலறைகளில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக அலுமினிய தாள் (Aluminium Foil) மாறிவிட்டது. உணவைச் சூடாக வைத்திருக்கவும், காய்கறிகளைப் பசுமையாகச் சேமிக்கவும் நாம் பயன்படுத்தும் இந்த மெல்லிய பளபளப்பான காகிதம், உண்மையில் ஒரு நிதானமான நஞ்சு என்பது பலருக்கும் தெரிவதில்லை. மிக எளிதாகவும் மலிவாகவும் கிடைப்பதால் நாம் பயன்படுத்தும் இந்த தாள், நமது ஆரோக்கியத்திற்கு எத்தகைய அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்து சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் அதிர்ச்சியூட்டும் […]

அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபிந்திர புர்கயஸ்தா (95), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி முதல் மோசமடைய தொடங்கியது. ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், […]

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வட மாவட்டங்களின் அரசியல் சமன்பாடுகள் அதிரடியாக மாற தொடங்கியுள்ளன. பாமகவுக்குள் தலைமைத்துவ போட்டி நிலவி வருவதாக கூறப்படும் சூழலில், அதிமுக – பாமக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அன்புமணி ராமதாஸ் தரப்பு அதிமுகவுடன் கைகோர்த்திருப்பது, மாற்றுக் கட்சிகளில் உள்ள நிர்வாகிகளிடையே ஒருவித சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் மாற்றத்தின் […]

இந்திய பொருளாதாரத்திற்கும், சாமானிய வாகன ஓட்டிகளுக்கும் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 2026 ஜனவரியில் இந்திய கச்சா எண்ணெய் கூடையின் சராசரி விலை பீப்பாய்க்கு $59.92 ஆக குறைந்துள்ளது. பிப்ரவரி 2021-க்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை இந்த மைல்கல்லை எட்டியிருப்பது இதுவே முதல்முறை. உலகளவில் விநியோகம் அதிகரித்ததும், அதே சமயம் […]

இந்திய ரயில்வேயின் பிரம்மாண்டமான இயக்கத்தில், தண்டவாளங்களுக்கு இணையாக பேசப்பட வேண்டிய மிக முக்கியமான அம்சம் ரயிலின் சக்கரங்கள். ஒரு சாதாரண இரும்பு வளையமாக தோன்றும் இந்த சக்கரங்கள், உண்மையில் பல கோடி ரூபாய் முதலீடும், அதிநவீன பொறியியல் நுட்பங்களும் ஒருங்கே அமைந்த ஒரு தொழில்நுட்ப அதிசயம். லட்சக்கணக்கான பயணிகளின் உயிரை சுமந்து கொண்டு, அதிவேகத்தில் பயணிக்கும் ரயிலின் நிலைத்தன்மைக்கும் பாதுகாப்புக்கும் இந்த சக்கரங்களே அச்சாணியாக திகழ்கின்றன. ரயில் சக்கரங்கள் தயாரிப்பில் […]

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வாழவந்தான்குப்பத்தில், சேலம் – சென்னை புறவழிச்சாலை பகுதியில் அதிமுக மகளிரணி சார்பில் பிரம்மாண்ட எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது பலத்தை காட்டும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரான நிர்மலா பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மேடையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை கண்டு உற்சாகமடைந்த நிர்மலா பெரியசாமி, திமுக அரசை கடுமையாக […]

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடும் வகையில், மாநில அரசு சார்பில் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மெகா பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் தலா 3,000 ரூபாய் ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீளச் செங்கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளன. அத்துடன் தமிழக அரசின் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளும் இந்தப் பரிசுத் தொகுப்புடன் இணைந்து வழங்கப்பட இருப்பது […]

தமிழ்நாட்டில் இந்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வுக்கு வாழ்வா சாவா போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, இடைத்தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என தொடர் சரிவுகளை சந்தித்து வரும் நிலையில், வரும் தேர்தலில் தங்களது பலத்தை நிரூபித்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது. இதற்காக, தேசிய கட்சியான பாஜக உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் இணக்கமான உறவைப் பேணி […]

இந்தியாவில் தங்கத்திற்கு பயன்படுத்தப்படும் ஹால்மார்க் முறையை (Hallmarking) இனி வெள்ளிக்கும் கட்டாயமாக கொண்டு வர அரசு பரிசீலித்து வருகிறது. வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், இந்த முடிவு நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த தகவலை இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். ஏன் இந்த மாற்றம்? வெள்ளி நகைகள் மற்றும் சிலை போன்ற […]

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் புதன்கிழமை அன்று சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கச் சட்டங்களை மீறுபவர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும், அவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது. அமெரிக்கச் சட்டங்களை மீறுவது அல்லது கைது செய்யப்படுவது மாணவர் விசாவை ரத்து செய்ய வழிவகுக்கும், நாடு கடத்தப்பட நேரிடும் அல்லது எதிர்காலத்தில் அமெரிக்க விசாக்களுக்கு சர்வதேச மாணவர்கள் தகுதியற்றவர்களாக மாற்றிவிடும் என்று தூதரகம் எச்சரித்துள்ளது. அமெரிக்கத் தூதரகம் […]