தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், கடந்த 2016ல் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-அரசு பணிகளில் பதவி உயர்வுகளில் மொத்தமுள்ள பணியிடங்களில் 4 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு என […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.72,560க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் […]
நோ டவுன் பேமென்ட், V, மிஸ்ஸிங் இன் ஆக்ஷன் III ஆகிய படங்களில் சினிமா ரசிகர்களை மகிழ்வித்த நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளராக செயல்பட்ட பாலிவுட் பிரபலம் அகி அலியோங் வயது 90-ல் காலமானார். டிமென்ஷியா என்னும் நியாமக மறதி நோயால் பாதிக்கப்பட்ட அவர், ஜூன் 23ஆம் தேதி திங்கட்கிழமை, கலிபோர்னியாவின் சில்மரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இந்த தகவலை அவரது 38 வயதான மனைவி கான்சிட்டா, உறுதிப்படுத்தினார். சிறுபான்மையினருக்காக […]
பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். சீனாவின் கிங்டாவோவில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், SCO உறுப்பினர்கள் பயங்கரவாதத்தைக் […]
முஸ்லிம் பெண்கள் குலா மூலம் தங்கள் திருமணத்தை முடிக்க முழு மற்றும் நிபந்தனையற்ற உரிமையைக் கொண்டுள்ளனர் என்று தெலுங்கானா உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும், இதற்கு கணவரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்லது. குலா என்பது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் விவாகரத்து செய்யும் ஒரு வடிவமாகும், குலா (Khul’) என்பது இசுலாம் சமயத்தில் கணவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் மனைவி கணவனை திருமண முறிவு […]
தனியாக வசிப்போர் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்காக விரைவாக தயாரிக்கக்கூடிய சிற்றுண்டியாக கருதப்படும் நூடுல்ஸ், தற்போது விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோவில், ராமன் நூடுல்ஸ் பேக்கெட்டின் பின்புறம் “புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க பாதிப்பு ஏற்படலாம்” என்ற எச்சரிக்கை வாசகம் காணப்படுவதால், நூடுல்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. ‘omggotworms’ என்ற பயனரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ராமன் நூடுல்ஸ் பேக்கெட்டின் பின்புறத்தில் சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ள […]
சீனாவில் வயிற்று வலி இருப்பதாக கூறி மருத்துவமனைக்குச் சென்ற 64 வயது நபரின் குடலில் இருந்து டூத் ப்ரஷி மருத்துவர்கள் அகற்றினர். இதில் ஆச்சரியமான விஷியம் என்னவென்றால் 17 செ.மீ. நீளமுள்ள டூத் ப்ரஷ் அவரது உடலில் 52 ஆண்டுகளாக சிக்கியிருப்பது தெரியவந்தது. South China Morning Post வெளியிட்ட செய்தியின்படி, அந்த நபர் சீனாவின் குவாங்டாங் மாகாண பகுதியை சேர்ந்த யாங் (Yang) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து […]
தமிழகத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஜூலை 1, 2025 முதல் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜூன் 30, 2026 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில்: “2025-2026-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என […]
கோவை மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால், […]
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. சமீபத்தில், அமெரிக்கா தனது B-2 குண்டுவீச்சு விமானம் மூலம் ஈரானின் அணுசக்தி தளங்களைத் தாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், பதற்றம் குறைவதாகத் தெரியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், உலகம் ஒரு பெரிய போரின் விளிம்பில் இருப்பதாக நிபுணர்கள் கூறிவருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் மூன்றாம் உலகப் போர் பற்றி நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. அழிவுகரமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தங்களை எவ்வாறு […]

