திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமத்தின் பசும் பண்ணையில், பசுக்களோடு பேசிக்கொண்டு இயற்கையை வாழ்வாக மாற்றியுள்ளார் ஒரு விவசாயி. அவர் தான் குணா. பசு வளர்ப்பை பழமையான தொழில் என்று சொல்பவர்களுக்கு மத்தியில், இது ஒரு வசதியான தொழில்முறை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். முன்பு, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த குணா, கொரோனா ஊரடங்கின் போது மீண்டும் தனது கிராமத்திற்கே திரும்பினார். வேலை இழப்பு, வருமான சிக்கல் […]

தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இரவோடு இரவாக தூய்மை பணியாளர்களையும் அவருக்கு ஆதரவாக போராடியவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளு இந்த நிலையில் […]

இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் முக்கியமான உடல் நல பிரச்சனை என்றால், அது உடல் எடை அதிகரிப்பு தான். இதற்கு வாழ்க்கை முறை, தவறான உணவியல் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின் பற்றாக்குறை ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. இதில் இருந்து விடுபட இயற்கையான, பாரம்பரிய வழிகள் பல இருந்தும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. அந்த வகையில், இன்று வெந்தய நீர் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். வெந்தயம் (Fenugreek) என்பது […]

நடைபயிற்சி பொதுவாக அனைவரும் தேர்ந்தெடுக்கும் ஒரு எளிய பயிற்சியாகக் கருதப்படுகிறது. 10,000 அடிகள் நடப்பது, 6-6-6 நடைபயிற்சி, ஜப்பானிய நடைபயிற்சி போன்ற பல்வேறு வகையான நடைபயிற்சிகள் நல்ல கார்டியோ பயிற்சிகளாகக் கருதப்படுகின்றன. நடைபயிற்சி என்பது இதயத்திற்கு நல்லது மற்றும் இடுப்பு கொழுப்பை அகற்றுவதற்கான ஒரு சிறந்த வழியாகும். ஆனால் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தனியாக நடப்பது மட்டும் போதுமா என்ற கேள்விக்கு நிபுணர்கள் பதிலளிக்கின்றனர். நடைபயிற்சிக்கும் வெவ்வேறு முறைகளைப் பின்பற்ற […]

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள வீரமார்த்தண்டன்புதூரை சேர்ந்த சுரேஷ் (41), நாகர்கோவிலில் இயங்கி வரும் ஒரு பிரபல இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி அனுஷா ஜாஸ்மின் (33), தனியார் பல் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களுக்கு வாழ்க்கையில், கடந்த சில காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. […]

ரஷ்யாவுடனான தொடர்ச்சியான போருக்கு மத்தியில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் ஒரு ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு உக்ரைனின் ஹாலிச்சில் உள்ள காலிசியன் கோட்டையின் கீழ் ஒரு ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1676 ஆம் ஆண்டு துருக்கிய-போலந்து போருக்குப் பிறகு கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில், ஆயுதங்களை சேமிக்க அல்லது பீரங்கிகளை சுட அறை பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உக்ரைனில் உள்ள ரகசிய அறை மற்றும் […]