ஜப்பான் நாட்டில் வரும் ஜூலை 5ஆம் தேதி பேரழிவு நிகழப் போவதாக நவீன பாபா வங்கா ரையோ தத்சுகி தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேச அளவில் பலர் ஜப்பான் பயணங்களை தவிர்த்து வருகின்றனர். எதிர்காலத்தை கணித்து கூறும் தீர்க்கதரிசிகள் என்றால் நாங்கள் நினைப்பது நாஸ்டர்டாமஸ், பாபா வங்கா போன்றவர்கள்தான். அவர்களைத் தொடர்ந்து இப்போது ‘ஜூனியர் பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரையோ தத்சுகி, தனது கனவுகளில் தோன்றிய விஷயங்களை “The Future […]

முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உமங் செயலி மூலம் யு.ஏ.என். எண் ஒதுக்கீடு உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் சேவைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும், பயனர்கள் பயன்படுத்த எளிதானதாகவும் மாற்றுவதற்கு தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள், அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பான, திறமையான சேவைகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். அண்மைக் காலங்களில் […]

கொண்டாட்டங்கள், பார்ட்டிகள் மற்றும் சில பண்டிகைகளின் போது மது அருந்துவது வழக்கம். இந்தியாவில் மது அருந்துவது பெண்களை விட ஆண்களே அதிகம். இந்தியாவில், ஆண்கள் மது அருந்துவதற்கு ஒரு காரணம் தேவை என்று கூறப்படுகிறது. இங்கு, கொண்டாட்டங்கள் அல்லது ஒன்றுகூடல்களின் போது மட்டுமல்ல, வார இறுதி நாட்களிலும் மது அருந்தப்படுகிறது. ஆனாலும் சில இந்திய மாநிலங்களில் பெண்கள் ஆண்களை விட அதிகளவில் மது அருந்துகிறார்கள். பெண்கள் அதிக மது அருந்தும் […]

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வந்த விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால் கொல்கத்தாவில் தரையிறக்கம். செவ்வாய்க்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்குச் செல்ல திட்டமிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI180, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொல்கத்தாவில் பயணிகளை அவசரமாக இறக்க விட்டது. தகவலின்படி, இந்த விமானம் நெதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தை நள்ளிரவு 12:45 மணிக்கு வந்தடைந்ததும், இடது எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக […]

இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டு திட்ட முகாம் தொடங்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, மக்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “பாதுகாப்பு 360” என்ற புதிய பொது காப்பீட்டு இயக்கம் 30.06.2025 வரை செயல்படுத்துகிறது. இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோள், எதிர்பாராத இழப்புகள், சேதங்களிலிருந்து மக்களுக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு […]

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மாமா நேற்று காலமானார். அவருக்கு வயது (72). பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டைத் தொடர்ந்து அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு பெண் குழந்தையும் உள்ளது. அங்கு ஹாலிவுட் படங்களில் […]

அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம் நிலவி வருகிறது. மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு காயத்துடன் வந்த நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் ஒருவரே மருத்துவம் அளித்த காட்சி காணொலியாக வலம் வருவது […]

2001ஆம் ஆண்டு மூடப்பட்ட்ட கர்நாடகா மாநிலத்தின் கோலார் தங்கச்சுரங்கம் மீண்டும் திறக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் மற்றும் நவீன சுரங்க தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்துத் திறனாய்வு செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்கச் சுரங்கம் கோலார் தங்க சுரங்கம் ஆகும். ஒரு காலத்தில் “இந்தியாவின் தங்க நகரம்” என்று அழைக்கப்பட்ட KGF, கர்நாடக மாநிலம் கோலாரில் 121 ஆண்டுகளாக வந்தது. தங்கம் உற்பத்தி குறைவாக இருந்ததால் […]

மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் […]

துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டும் அவர்களுக்கு மீண்டும் ஒரு […]