ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை. இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் படுகொலைக்குப் பிறகு இந்த மோதல் முடிவுக்கு வரும் என்று நெதன்யாகு கூறியுள்ளார். ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திங்களன்று ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி […]

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, அடுத்த 3 மாதங்களில் மேலும் 25 அடிப்படை புள்ளிகள் (basis points) வட்டி விகிதத்தில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய மூன்று முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதையடுத்து, தற்போது ரெப்போ விகிதம் 5.50% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக, வங்கிகள் தங்களது கடன் வட்டி விகிதங்களிலும் […]

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ். இவருக்கும், தேனி மாவட்டத்தை சேர்ந்த வனராஜா என்பவரின் மகள் விஜயாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், தனது மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் […]

நடிகர் முகுல் தேவின் கடைசி நாட்கள் எவ்வளவு சோகமானது என்பதை அவரது அண்ணனும், நடிகருமான ராகுல் தேவ் கூறியுள்ளார். டெல்லியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் முகுல் தேவ். நடிகர் ராகுல் தேவின் தம்பியும் ஆவார். முகுல் தேவ் 8ஆம் வகுப்பு படித்தபோது ஒரு டிவி நடன நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சனைப்போல ஆடி பரிசு பெற்றார். அவர், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரான் அகாடமியில் படித்து, பயிற்சி பெற்ற விமானியாகவும் இருந்தார். […]

இன்று மதியம் திடீரென ஜியோ நெட்வொர்க் முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதியடைந்துள்ளனர். இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்து வருகிறது. கோடிக்கணக்கான பயனர்கள் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் பரவலான நெட்வொர்க் பிரச்சனைகளை சந்திப்பதாக புகாரளித்து வருகின்றனர். இணைய இணைப்பு, மொபைல் சிக்னல்கள் மற்றும் ஜியோ ஃபைபர் சேவைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து புகார் கூறி உள்ளனர்.. […]

மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், புதிய அறிகுறிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. LF.7, XFG, JN.1, NB.1.8.1 உள்ளிட்ட பல மாறுபாடுகள் கொரோனா பரவலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதில் NB.1.8.1 என்ற புதிய துணை வகைகளில் ஒன்றாகும். இது Omicron குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.. ஆம், 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து உருமாற்றம் அடைந்து வரும் […]

மத்திய அரசின் வருவாய் துறை, புலனாய்வுத் துறை, சிபிஐ, போதைமருந்து தடுப்பு பிரிவு, தபால் துறை, ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளில் குரூப் ‘B’ மற்றும் ‘C’ வகை பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தியுவரும் CGL (Combined Graduate Level) தேர்வு மூலம், 2025-ம் ஆண்டிற்காக மொத்தம் 14,582 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அறிவிப்பு ஜூன் 9-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் […]