சீனாவின் ‘காவோகாவோ’ (Gaokao) எனப்படும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் சனிக்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. நாட்டின் கல்வி எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்வில், 13.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வுகளின் நேர்மையைக் காக்கும் முயற்சியாக, அலிபாபா, டென்சென்ட், பைட் டான்ஸ் போன்ற முன்னணி சீன தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுடைய AI (Artificial Intelligence) அம்சங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன. AI-க்கு தடை: சீனாவில் நடைபெறும் முக்கியமான பல்கலைக்கழக […]

UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 1 முதல், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அதாவது NPCI அதன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (API) பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிகளைக் கொண்டு வர உள்ளது. […]

திமுகவை சேர்ந்த ஆண்டிப்பட்டி எம் எல் ஏ மகாராஜன் மகளிர் இலவச பேருந்தை பெண்களின் ஓசி பஸ் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அரசு உள்ளூர்ப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பணிபுரியும் மகளிர், உயர் […]

ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாத 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது 2025–26 கல்வியாண்டு தொடங்கவிருக்கும் நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்கு மாற உள்ளனர். இந்த நிலையில், ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்று கூறி பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்தியா முழுவதும் உள்ள 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 5 தமிழக பல்கலைக்கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராகிங் […]

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7121 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கோவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின்படி, இன்று வரை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7121 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 306 புதிய வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்று ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. கேரளாவில் 2223 கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டியின் மாமனார் அபு (90) தற்போது உடல்நலக் குறைவினால் காலமானார். நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற மூத்த நடிகராக உள்ளார். மம்முட்டி 1979-ல் வெளியான வில்கானுண்டு சொப்னங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும், மாநில அளவில் 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் மிக […]

தாஜ்மஹாலின் 22 பூட்டிய அறைகள் பற்றி தெரியுமா? இந்த அறைகள் ஏன் பல ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டுள்ளன? இதுகுறித்து தற்போது பார்க்கலாம். உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அதன் அழகு மற்றும் கட்டிடக்கலைக்காக போற்றப்படுகிறது.. அதன் பிரமிக்க வைக்கும் வெள்ளை பளிங்கு மற்றும் பிரபலமான காதல் கதையைத் தவிர, மக்களை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தும் பல ரகசியங்களையும் இது கொண்டுள்ளது. தாஜ்மஹாலின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்று அதன் அடித்தளத்திற்குள் […]