பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய், கரும்பு ஆகியவற்றை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ளது. அதில், இந்தாண்டு பொங்கலுக்கு வழங்கியது போல், பலவித மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி காலமானார். அவருக்கு வயது 46. Kkusum, Waaris, Suryaputra Karn போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அறியப்பட்ட நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி இன்று காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது சித்தாந்த் வீர், சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இவரை மருத்துவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் அது பலனளிக்காமல் போனது. […]
வேப்பூர் அருகே கணவரை கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் என நாடகமாடிய மனைவி மற்றும் மகன், மகள்களை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் புஷ்பநாதன் என்ற மகனும், 10ஆம் வகுப்பு படிக்கும் கலைவாணி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், ஆறுமுகம் 13 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உட்பட 6 பேர் சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் நளினி பரோல் விடுப்பில் வெளியே உள்ளார். இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 […]
தமிழ் சினிமா திரைப்பட உலகில் எல்லாம் அவன் செயல் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய மனைவியுடன் சென்னை டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்துள்ளார். மனைவி தனியாக வீட்டில் இருந்த நிலையில், பின்புறமாக வந்த மர்ம நபர்கள் ஆயுதங்களை காட்டி அவரை கட்டிப் போட்டுவிட்டு, வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.2 லட்சம் மற்றும் 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் […]
ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் சகோதரனின் மகன் விவேக், தன்னுடைய மனைவியுடன் எம்ஆர்சி நகரில் வசித்து வந்துள்ளார். இவர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றார். விவேக்- கீர்த்தனா தம்பதிக்கு சசிகலாவின் தலைமையில் தான் திருமணம் நடந்தது. கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை பற்றி திருமணத்தை நடத்தி வைத்த சசிகலாவிடம் பலமுறை கூறியதாகவும் விவேக்கை அவர்கள் யாரும் கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று […]
சென்னையில் நடிகர் ராதாகிருஷ்ணனின் மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகையை கொள்ளையர்கள் சுருட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ் சினிமாவில் ’எல்லாம் அவன் செயல்’ படத்தின் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் ராதாகிருஷ்ணன் என்ற ஆர்.கே. இவர் ஜில்லா, அவன் இவன், அழகர் மலை உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவருயை மனைவி ராஜீ (53). இவருக்கு […]
திருமணத்திற்கு மறுத்த காதலியை அவரது தாய் கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே சித்தார்த் நகரில் வசித்து வந்தவர் ஸ்வேதா (26). ஸ்வேதாவின் உறவுக்கார பையன் பிரதீக் கிசான். இவர் பொறியியல் படிப்பு முடித்து, தண்ணீர் கேன் கம்பெனி நடத்தி வந்துள்ளார். ஸ்வேதா-பிரதீக் கிசான் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வீட்டில் தங்களது காதலை சொல்லியபோது, […]
பிரபல அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் குறித்து அவதூறாக விமர்சித்த சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் சிறையிலேயே உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், […]
அமெரிக்காவில் வசிக்கும் அருணா மில்லர் 6 நவம்பர் 1964 நாள் அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்து, தன்னுடைய ஏழு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாக தெரிய வந்ததுள்ளது. இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு மிசோரி என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இவர் சிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார். அத்துடன் மாண்ட்கோமெரி கவுண்டி பகுதியில் உள்ளூர் போக்குவரத்துத் துறையில் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். தற்போது 58 […]