மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொன்ற வழக்கில், நகை திருட்டு புகார் கொடுத்த கல்லூரி பேராசிரியை திருமங்கலம் நிகிதா, அவரது தாயார் சிவகாமியிடம் சிபிஐ அதிகாரிகள் மதுரையில் 2-வது முறையாக விசாரித்தனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வந்த கோவில் காவலாளி அஜித் குமார், அங்கு சாமி கும்பிட வந்த நிகிதா என்னும் பெண்ணின் நகை காணாமல் போன வழக்கில், […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
2024ம் ஆண்டை இந்தியா மட்டுமல்ல உலகமே மறக்க முடியாத அளவுக்கு நடந்த இயற்கை பேரிடர் சம்பவத்தில் வயநாடு நிலச்சரிவும் ஒன்று. மனிதர்களின் அசுர ஓட்டத்துக்கு இயற்கை கொடுத்த வேகத்தடையாக அமைந்துவிட்ட வயநாடு நிலச்சரிவு கிட்டத்தட்ட 298 உயிர்களை பலிகொண்டது. மேலும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன ஆனது என்பது இன்னுமும் கூட தெரியவில்லை. மிக அழகிய ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருந்த சூரல்மலை, முண்டக்கை பகுதிகளே நிலச்சரிவின் […]
களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் என 13 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். அரசு பணிகள் திறம்பட நடப்பதற்கு தற்போது ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் என்ற சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது. அரசு சம்பளம் பெறுவோருக்கு இந்த சாப்ட்வேர் மூலம் […]
“நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சிக்காக கூகுள், யூனிட்டி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தில், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திறன்சார்ந்த பயிற்சிகள் பெற்று வருகின்றனர். மேலும் தமிழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் […]
தமிழகத்தில் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. […]
டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் நடைபெறுகிறது. சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாவட்டத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நிலத்தடி நீரை கொண்டு இப்பகுதியில் அதிக விவசாயம் நடைபெறுவதால் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பெருமளவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெல் மற்றும் இன்றி மாற்று பயிராக வாழை, கரும்பு, மஞ்சள், பருத்தி, மற்றும் காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டு இப்பகுதி […]
ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 5 பேர், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேர் என மொத்தம் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகை, புத்தளம் கடற்பரப்பில் நேற்று காலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகிலிருந்த […]
ரஷ்யா, ஜப்பான் அருகே 8.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்திலிருந்து சுனாமி எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, நிலநடுக்கம் ஆழமற்றது, வெறும் 19.3 கிலோமீட்டர் (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது, இது குறிப்பிடத்தக்க மேற்பரப்பு அதிர்வு மற்றும் சுனாமி […]
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், பணியில் இருந்த மருத்துவர் தூங்கிக் கொண்டிருந்ததால், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததாக வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த திங்கள் கிழமை மாலை விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் சுனில் என்பவர் லாலா லஜபதி ராய் நினைவு (LLRM) மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, […]
கூட்டுப் பட்டா என்பது ஒரு நிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும்போது வழங்கப்படும் பட்டா ஆகும். இதில், நிலத்தின் உரிமையாளர்கள் அனைவரும் கூட்டாக குறிப்பிடப்படுவார்கள். நிலத்தின் பரப்பளவு மற்றும் ஒவ்வொரு உரிமையாளரின் பங்கு, தனித்தனியாக பிரிக்கப்படாமல், ஒன்றாக குறிப்பிடப்படும். இது நிலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், கூட்டுப் பட்டாவாக இருக்கும் நிலங்களை வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள். கூட்டுப் பட்டா என்றால் என்ன…? […]

