மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கல்வி நிலைய கட்டிடங்களை வரன்முறை படுத்த கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவு. தமிழகத்தில், 2011க்கு முன் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த திட்டம், 2020 பிப்., 18ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு, ஆறு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் பெறப்பட்ட மனுக்கள், பல்வேறு நிலைகளில் பரிசீலனையில் உள்ளன. மீண்டும், ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பிலிப்பைன்ஸின் மின்டானாவ் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 4:37 மணிக்கு ஏற்பட்டது, மேலும் அதன் மையம் தரையில் இருந்து 105 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. தற்போது வரை உயிர் அல்லது சொத்து இழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை, ஆனால் நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மக்கள் பாதுகாப்பாக […]
சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 10.07.2025 முதல் 14.07.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 10.07.2025 முதல் 14.07.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, […]
ஆப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் இதய துடிப்பு போன்று ஆழமான அதிர்வுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் அது கண்டத்தையே துண்டாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவின் அஃபார் பகுதிக்கு அடியில், ஆழமான பகுதியில், இதயத் துடிப்பு போன்ற உருகிய பாறை துடிப்புகளின் அதிர்வுகள் எழுவது புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாகவும், மில்லியன் கணக்கான ஆண்டுகளில், இந்த செயல்முறை ஒரு புதிய பெருங்கடலை உருவாக்கும் என்று […]
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசின் நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. நிலத்தடி நீரை பயன்படுத்தும் உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு […]
ஸ்கேன் செய்து பாலினத்தை கண்டறிந்து பெண் சிசுவை கலைக்க முயன்றதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் திருத்த மசோதாவை கடந்த 2020-ம் ஆண்டு மத்திய கொண்டு வந்தது. 20 வார காலம் உள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை மற்றும் 20 முதல் 24 வாரம் வரையுள்ள கருவைக் கலைப்பதற்கு […]
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கட்கா கிராமத்தில், வானில் இருந்து வயலில் மேகம் விழுவது போன்ற விசித்திரமான வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை மாறுபாடு காரணமாக இதுபோன்ற பல்வேறு இயற்கை நிகழ்வுகள் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விஞ்ஞானிகளும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகின்றனர். மிக அரிய நிகழ்வு என்ற போதிலும், இதுபோன்ற சில வீடியோக்கள் உண்மையா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், உத்தரபிரதேச […]
சேலம் மாவட்டத்தில் 50% மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2025-26ஆம் நிதியாண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு திறமையும் ஆர்வமும் உள்ள 10 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள பயனாளிகள் […]
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் திருத்தம் இருப்பின் ஜூன் 29-ம் தேதி முறையிடலாம். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியாகும். தொடர்ந்து அனைத்து விதமான ஆசிரியர்களுக்கான பொது […]
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முதலாமாண்டு சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக மருத்துவ அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் அனைத்து கூற்றுகளும் மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் உடலில் கடித்து வைத்த பற்களின் அடையாளங்கள், நகக் கீறல்கள் மற்றும் கட்டாய பாலியல் வன்கொடுமைக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கு வங்க […]

