திண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை உயர்வு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பூவின் வரத்து அதிகரித்ததால், பல்வேறு வகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக திண்டுக்கல் சந்தையில் சம்பங்கி ரூ.30, குல்லைப்பூ ரூ.150, மல்லிகை ரூ.400க்கு விற்பனையாகிறது. முந்தைய வாரங்களில் மல்லிகை பூ ரூ.700 வரை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூடாது எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் கட்சிக்கு இரட்டை சிலை சின்னம் ஒதுக்ககூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு மனுக்கள் அனுப்பப்பட்டது.. இந்த […]
உலக தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் மைக்ரோசாப்ட், தற்போது மீண்டும் பெரும் அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள தகவல் ஊழியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட்டில் வேலை என்பது பலருக்கும் கனவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக நிறுவனத்தில் நடைபெறும் பணிநீக்கங்கள் ஊழியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது. இது கடந்த 18 மாதங்களில் மைக்ரோசாப்ட் மேற்கொள்கின்ற நான்காவது பெரிய பணிநீக்கம் என்பது கவலையளிக்கும் உண்மை. ஜனவரி 2024ல் கேமிங் பிரிவில் […]
புதுச்சேரியில் பாஜக நியமன MLA-க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமலிங்கம், வெங்கடேசன், ரமேஷ் பாபு ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை சபா நாயகரிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இவர்கள் ராஜினாமா செய்ததற்கான தெளிவான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், பாஜக மாநிலக் குழுவில் இடம்பெறும் உள்கட்சி முரண்பாடுகள், அமைச்சரவை பதவிக்கு இடமாற்றங்கள், மற்றும் அணிச்சேர்க்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட […]
எதிர்காலத்தை கணிக்கும் திறன் கொண்டவர் என்று அறியப்படுபவர் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா. இவர், 2025 ஆம் ஆண்டில் நடக்கும் பல முக்கிய நிகழ்வுகள் குறித்து கணித்துள்ளார். அவரது பல கணிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் துல்லியமானவை என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, அவர் 9/11 தாக்குதல்கள் மற்றும் இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்ட உண்மையான நிகழ்வுகளை பாபா வங்கா முன்பே கணித்திருந்தார். முக்கிய நிகழ்வுகள் மட்டுமின்றி, ராசிகளுக்கான பணவரவு குறித்தும் அவர் […]
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிப் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் உரிமை காவல்துறைக்கு உள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிப் பயணிப்பது உயிருக்கு ஆபத்தானது என்றும், மாணவர்களுக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பஸ்கள் […]
அகமதாபாத்தில் நடந்த ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது, ஊர்வலத்துடன் வந்த யானைகள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதால், அங்கிருந்த பக்தர்கள் பீதியடைந்தனர்.. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரத யாத்திரையின் போது கட்டுப்பாட்டை இழந்து ஓடிய யானைகளை மீண்டும் கட்டுப்படுத்த யானைப் பாகன்கள் போராடுகின்றனர். ஆனால் மக்கள் பீதியில் சிதறி ஓடுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலும் அந்த யானைகளில் […]
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திரையுலக பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் தலைமறைவான […]
கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு சட்டக் கல்லூரிக்குள் ஒரு சட்ட மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மாணவர் மற்றும் இரண்டு கல்லூரி ஊழியர்களால் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஜூன் 25 ஆம் […]
பாமக நிறுவனரை சந்தித்தது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவதால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அவர் சந்தித்தாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மரியாதை நிமித்தமாகவே ராமதாஸை சந்தித்தாக செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

