டிசம்பர் 4-ம் தேதி ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டில் இருவரும் பிசியாக உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் உள்ள ஈஃபில் டவர் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோபுரத்தின் முன்பு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். காதலர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படும் பாரிஸ் நகரத்தில் காதல் சின்னமாக கருதப்படும் ஈஃபில் கோபுரம் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஐடி கணக்கு தாக்கல் செய்ய ஒரே வருமான வரி படிவத்தை அறிமுகப்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு கணக்குத் தாக்கல் செய்வதற்காக தற்போது 7 வகை படிவங்கள் இருக்கிறது. இந்நிலையில், வருமான வரி செலுத்தும் அனைத்து வகையினரும் பயன்படுத்துவதற்கு எளிதான விதமாக ஒரே வருமான வரி படிவத்தை அறிமுகப்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், இது பற்றிய அறிவிப்பை மத்திய […]
தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கர் பகுதியில் வசிப்பவர் ஷியாம் சிங் (25). பெற்றோரை இழந்த இவர் சோனிபட் மயூர் விஹாரில் உள்ள தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு, கோஹானா கிராமத்தை சேர்ந்த அஞ்சலி (23) என்ற பெண்ணுடன் சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அஞ்சலி, […]
பாலம் விபத்தில் ஒரேவா நிறுவனத்தின் மேலாளர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிபதியிடம் இந்த விபத்து கடவுளின் விருப்பம் என பதில் அளித்துள்ளது மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கும் பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 141 பேர் உயிரிழந்த நிலையில் 170 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலத்தை பராமரித்த ’ஒரேவா’ என்ற […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 2021இல் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக முக.ஸ்டாலின் பதவியேற்றார். அப்போது, பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. […]
தமிழகத்தில் அடுத்த வரும் 5ம் தேதி வரை கனமழை விடாது கொட்டித்தீர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. இந்த மழை படிப்படியாக அதிகரிக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அதே போல படிப்படியாக அதிகரித்து மழை கொட்டித்தீர்க்கின்றது. தொடர்ந்து மேலும் 3 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு […]
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாளை ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 1,037-வது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் […]
கோவை மாவட்டம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் மூதாட்டி ஒருவர் அங்கே வந்திருந்தார். மேலும் அவர் கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு செல்லாதது என தெரிவித்த சில பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் இதனை பற்றி மனு கொடுக்க நேரில் வந்திருக்கிறார். அவரிடம் மொத்தம் ரூ.15 ஆயிரம் […]
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் இந்திய அரசியல் கட்சிகள் பலவும் இப்போதே ஈடுபட துவங்கிவிட்டனர். கூட்டணி பேச்சு வார்த்தைகள், மக்களுக்கான திடீர் அறிவிப்புகள் என்று பரபரப்பு ஏற்பட துவங்கியுள்ளது. இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டணி வைக்க பல முன்னணி கட்சிகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் அழைப்பு விடுத்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக இன்று அவர் தமிழகத்திற்கும் வர உள்ளார். மேற்குவங்க ஆளுநராக இருக்கும் இல.கணேசன் வீட்டில் நடக்கும் […]
அகில இந்திய வங்கி பணியாளர்கள் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், “வங்கி ஊழியர்கள் குறித்த பல்வேறு பிரச்சனைகளில் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கின்றது. இரு தரப்பில் இருந்தும், கலந்து ஆலோசனை செய்யாமல் மேம்போக்காக முடிவுகளை எடுக்கின்றனர். விதிமுறைகள் பலவற்றையும் மீறி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசு தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கின்ற உத்தரவுகளை வங்கி நிர்வாகங்கள் எப்பொழுதும் கடைபிடிப்பது இல்லை. பணியாளர் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே […]