குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் பணிபுரிந்துவந்த 600-க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை இயக்குனர் அமுதவல்லி வெளியிட்ட அறிவிப்பில்; மத்திய அரசு வழிகாட்டுதலின் படி, போஷான்‌ அபியான்‌ திட்டத்திற்கென வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில்‌ 01.08.2022 முதல்‌ ஒப்புதல்‌ அளிக்கப்படாமல்‌ விடுபட்டுள்ள ஒப்பந்த பணியிடங்கள்‌ தொடர்பாக மத்திய அரசின்‌ நெறிமுறைகளை கண்டிப்பாக நடவடிக்கை மேற்‌கொள்ளுமாறும் மற்றும்‌ […]

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் […]

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் 26 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள. ஐடி விதிகள் 2021 இன் படி, செப்டம்பர் மாதத்திற்கான அறிக்கையை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பயனர்-பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எங்கள் தளத்தை தவறாக பயன்படுத்திய நபர்கள் மீது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது., 2021 ஆம் ஆண்டு புதிய ஐடி […]

எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையில் நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று காலை 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் […]

மயிலாடுதுறையில் வரும் 16ம் தேதி நடைபெற உள்ள கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறை துலாக் கட்ட காவிரியில் ஆண்டு தோறும் நடைபெறும் கடைமுக தீர்த்த வாரி உற்சவத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவது வழக்கம். விழாவில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநா தர், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான […]

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூட்டத்தில் மக்கள் கூச்சலிட்ட நேரத்தில் அமைச்சர் பொன்முடி கெட்ட வார்த்தையில் திட்டியதாக வீடியோ வைரலாகி வருகின்றது. ஏற்கனவே பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிலையில் தற்போது புது சர்ச்சையாக இது உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் உயர்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டிய இவர் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகி வருகின்றது. கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி விழுப்புரத்தில் நியாயவிலைக் கடை […]

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சென்னையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்பட தொண்டர்கள் கைது செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. சென்னையில் பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பா.ஜ.க. மகளிர் நிவாகிகள் குஷ்பூ, கௌதமி ஆகியோர் குறித்து திமுக நிர்வாகி சாதிக் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகின்றது. இதனால் சாதிக்கை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க. […]

கர்நாடக திரையுலக பவர்ஸ்டார் என்றழைக்கப்படும் புனித் ராஜ்குமார் இறந்து 3 நாட்களுக்கு பின்னரே தனக்கு விஷயம் தெரிந்ததாகவும் பின்னர் கடும் அதிர்ச்சியடைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் தோன்றி 67வது ஆண்டில்அடி எடுத்து வைக்கின்றது. இந்த விழாவை கொண்டாடும் விதமாக அரசு சார்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கர்நாடக தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ’கர்நாடக ரத்ன’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று விருது வழங்கினார். சமூக […]

மாந்தீரிகரின் முட்டாள்தனமான பரிகார யோசனையை கேட்டு, இளம் சிறுமியை ஆசிரியரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டம் பிஷ்னுபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு வயது 37. இந்நிலையில், அந்த ஆசிரியர், தான் பணிபுரியும் பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அதாவது 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல கொரியன் பாப் இசை பாடகர் லீ ஜிகானும் மரணமடைந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தென்கொரிய தலைநகர் சியோலில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது உலக நாடுகளை அதிர வைத்தது. இந்த ஹாலோவீன் திருவிழாவில் அதிகப்படியான இளம் பெண்கள், குழந்தைகள், முதியோர் பங்கேற்றது தெரியவந்த […]