சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இரவு இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், […]

ஒரே நாள் மழைக்கு சென்னை மாநகரம் வெள்ளக்காடாகி தண்ணீரில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்களில் அலுவலகத்திற்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வரும் 4ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு […]

கேரளாவில் காதலன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை மூறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு ரேடியாலஜி படித்து வந்தார். கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற கல்லூரி மாணவியுடன் […]

நம்ம மெட்ரோ எனப்படும் பெங்களூரு மெட்ரோ ரயில்களில் பயணிக்க வாட்ஸ் ஆப் பயன்படுத்தி டிக்கெட் பெறும் புதிய முறையை நம்ம மெட்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷன் வெளியிட்டுள்ள தகவலில் ’’வாட்ஸ் ஆப்பில் டிக்கெட் பெறும்  வகையிலும் சேட் பாக்ஸ்-ல் இந்த வசதியை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்மெட்ரோ பயனர்கள் இனி டோக்கன்களையோ, அட்டைகளையோ கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கது. இந்த சேட்பாட் மூலம் டிக்கெட் […]

குஜராத்தில் பிரதமர் நரேந்திரமோடி வருகையை ஒட்டி மருத்துவமனையில் ஒரே ராத்திரியில் மருத்துவமனையை பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பளபளவென மாற்றியுள்ளனர். குஜராத்தின் மோர்பி பகுதியில் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் 141 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பா.ஜ.க. எம்.பி.யின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தனர். 170க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில்சந்திக்க வருகை தருகின்றார். […]

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் சராசரியாக பல இடங்களில் 7-8 செ.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக சென்னையில் கனமழை […]

நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் சென்ற கார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் கனடாவில் உள்ளார். நேற்று தன் குழந்தைகளுடன் வெளியே காரில் புறப்பட்டு சென்றபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. இந்நிலையில் அவர் மீட்கப்பட்டுஅருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரம்பா உயிருக்கு ஆபத்து இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. அவரது குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. விபத்தில் சிக்கிய […]

ஈரோடு அருகே 4 மாத கர்ப்பிணி காதலியின் கழுத்தை நெறித்துக் கொன்ற காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தில் கார்த்தி – பிருந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி 4 மாத கர்ப்பிணியாக இருந்த பிருந்தா, வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்த பிருந்தா, திருமணத்திற்கு […]

கள்ளக்காதலியுடன் கணவர் விஷம் குடித்த நிலையில், இருவரையுமே மீட்டு மனைவி மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் தர்மராஜ், அந்த பகுதியில் கூலித்தொழில் செய்து வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி தமிழரசி மற்றும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், 20 வயதான இளம்பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டிற்கு முன்பு சேலம் பழைய பேருந்து நிலையம் […]

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்தியபாமா. சத்தியபாமா சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் ஏரலை பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற வாலிபர் குறி சொல்வதாக கூறி அந்தப் பகுதிக்கு வந்துள்ளார். அதனை தொடர்ந்து சத்தியபாமா அவரிடம் குறி கேட்டுள்ளார். அந்த வாலிபர் உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் , அதற்கு […]