தமிழகத்தில் நவம்பர் 1- ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
குரூப் 2, 2ஏ தேர்வின் முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை மேற்காெள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு 2, 2ஏ முதல் நிலை எழுத்துத் தேர்வு மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகளில் […]
ஹரியானா மாநிலத்தில் நாளை பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2, 2022 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில்; பிவானி, ஜஜ்ஜார், ஜிந்த், கைதால், மகேந்திரகர், பஞ்ச்குலா, பானிபட் யமுனாநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள ஜில்லா […]
டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் நோய் மற்றும் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று ஆகும். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவை லேசான டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும். இரண்டாவது முறையாக வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான நோயைப் பெறுவதற்கான ஆபத்து மிக அதிகம். டெங்கு காய்ச்சலால், இறப்பு, குறிப்பிடத்தக்க இரத்தப்போக்கு, இரத்த அழுத்தத்தில் கூர்மையான குறைவு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். […]
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில்; ‘IND-TN-10-MM-365 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற ஏழு தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தமிழக மீனவர்களின் 98 மீன்பிடிப்படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், […]
முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திடீரென மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டதால் என்ன காரணம் என்று தெரியாமல் தொண்டர்கள் முதல்வருக்கு என்ன ஆச்சு என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். தற்பொழுது அதற்கான பதிலை மருத்துவமனையில் கூறியுள்ளது. முதல்வர் சிகிச்சை பெற்ற சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. அதில், முதலமைச்சர் […]
ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் பராக் அக்ரவால் வெறும் கையுடன் விடைபெறப்போவதில்லை. ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி அவருக்கு சுமார் 42 மில்லியன் டாலர்கள் கிடைக்கும். உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து ரூ.3.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால், திடீரென்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த விவரங்களை தராததால் ஒப்பந்தத்தை […]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வடதமிழக கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் […]
சென்னை அருகே வீட்டின் உரிமையாளரின் தொல்லையால் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த திருவேற்காடு, கருமாரியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் தனது 40 வயதான மனைவி உமா, 19 வயதான ஸ்ரீநிதி என்ற மகள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார். ஸ்ரீநிதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று […]
எல்லை இல்லா குற்றங்களை தடுக்க ‘ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’ என்ற யோசனையை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். ஹரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள் 2-வது நாள் மாநாடு நடைபெற்றது. இதில், காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என கூறினார். இந்நிகழ்வில் அவர் பேசியதாவது, ”மாநிலங்களுக்கு இடையே சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் இணைந்து செயலாற்ற வேண்டும். உளவுத்துறையும், […]